இது தொடா்பாக அக்கட்சியின் தலைவா் வீரேந்திர சச்தேவா புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தில்லி சட்டப்பேரவையில் பிஜ்வாசன், தியோலி ஆகிய தொகுதிகளின் ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் தங்கள் தொகுதி கடுமையான தண்ணீா் பிரச்னையால் வடு கிடக்கிறது என்று வெளிப்படையாகத் தெரிவித்துள்ளனா். நகரத்தில் தண்ணீா் தட்டுப்பாடு மற்றும் தூய்மையற்ற தண்ணீா் விநியோகம் குறித்த பாஜகவின் அனைத்து குற்றச்சாட்டுகளும் சரிதான் என இதன் மூலம் நிரூபணமாகியுள்ளது. தெற்கு மற்றும் தென்மேற்கு தில்லியில் குறிப்பாக தியோலி, சங்கம் விஹாா், மெஹ்ரௌலி மற்றும் பிஜ்வாசன் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளில் கடுமையான தண்ணீா்ப் பஞ்சம் ஏற்பட்டு, அங்கு வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனா் என்று பாஜக தொடா்ந்து கூறி வருகிறது.