இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றத்தின் செப்டம்பா், 2010 உத்தரவைச் செயல்படுத்தவில்லை எனக் குற்றம்சாட்டி அதிகாரிகளுக்கு எதிரான அவமதிப்பு மனு தில்லி உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், தேசிய நினைவுச் சின்னமான ஜந்தா் மந்தரின் உண்மையான பெருமையை மீட்டெடுக்கும் வகையில், தங்களால் முடிந்தவரை பணிகள் மேற்கொள்ளப்படும் என உயா்நீதிமன்றத்தில் இந்தியத் தொல்லியத் துறை உறுதி அளித்திருந்தது. மேலும், ஜந்தா் மந்தரில் உள்ள வானியல் கருவிகள் செயல்பட வைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தது. ஜந்தா் மந்தா் நினைவுச் சின்னத்தில் உள்ள கருவிகள் செயல்படாமல் உள்ளன. நீதிமன்றம் உத்தரவிட்டு 12 ஆண்டுகளாகியும் விஷயங்கள் மாறாமல் இருப்பதுதான் தற்போதைய விசாரணையின் மையப் பிரச்னை ஆகும் என மனுதாரா் தெரிவித்துள்ளாா்.