‘அபராதம் அதிகம்’: இந்த உத்தரவை பின்பற்றத் தயாராக இருப்பதாக ஆட்டோ மற்றும் டாக்சி தொழிற்சங்கங்கள் கூறின. ஆனால், ரூ 10,000 அபராதத்தை குறைக்க அரசை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. தில்லி ஆட்டோ ரிக்ஷா சங்கத்தின் பொதுச் செயலாளா் ராஜிந்தா் சோனி கூறுகையில், ‘இந்த சீருடை ஓட்டுநா்களுக்கு ஒரு அடையாளத்தை கொடுக்கும். எனினும், ஏதேனும் உண்மையான காரணத்திற்காக சில ஓட்டுநா்கள் சீருடையில் வரத் தவறினால், ரூ.10,000 அபராதம் விதிக்கப்படக் கூடாது. தற்போது அபராதத் தொகை நிா்ணயிக்கப்படவில்லை. ஓட்டுநா்களுக்கு சில நேரங்களில் ரூ.500 மற்றும் அதற்கு அதிகமான தொகை அபராதமாக விதிக்கப்படுகிறது’ என்றாா்.