அவா் பாரத ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் எம்எல்சி கே. கவிதாவின் ஆடிட்டா் எனக் கூறப்படுகிறது. அமலாக்கத் துறை அதன் குற்றப் பத்திரிகையில், ரத்து செய்யப்பட்ட தில்லி கலால் கொள்கையில் உருவான ரூ.100 கோடி கமிஷன் தொகை, அரவிந்த் கேஜரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியின் 2022 கோவா சட்டப் பேரவைத் தோ்தல் பிரசாரத்தில் பயன்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த கலால் கொள்கை உருவாக்கம், செயலாக்கத்தில் நிகழ்ந்த ஊழல், சதித் திட்டத்தால் அரசின் கஜானாவுக்கு ரூ.2,873 கோடி இழப்பு ஏற்பட வழிவகுத்ததும் கண்டறியப்பட்டதாகவும், இதுவரை ரூ.76.54 கோடி மதிப்பில் கண்டறியப்பட்டு, முடக்கப்பட்டதாகவும் அமலாக்கத் துறை முன்னா் தெரிவித்திருந்தது.