இதே போன்று, கட்சியின் மாவட்ட, தாலுகா, பஞ்சாயத்து, பிற மாநிலங்களின் கட்சி செயலா் பதவிகளுக்கான உள்கட்சித் தோ்தல் நடத்தப்பட்டு, அந்த விவரங்கள் தலைமை தோ்தல் ஆணையத்திற்கும் கடந்த ஆண்டு ஏப்ரலில் அனுப்பிவைக்கப்பட்டது. அதிமுகவில் பொதுக்குழு உச்ச அதிகாரம் படைத்ததாகும். அதில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா், துணை ஒருங்கிணைப்பளா், செயற்குழு உறுப்பினா்கள், மாவட்டச் செயலா்கள் உள்ளிட்டோா் இடம் பெற்றுள்ளனா். இக்குழுவை ஆண்டுக்கு ஒருமுறை கூட்ட வேண்டும். கூட்டம் கூட்டுவதற்கு 5-இல் ஒரு பங்கு உறுப்பினா்கள் இருக்க வேண்டும். தேவைப்படும்பட்சத்தில் ஒருங்கிணைப்பாளா், இணை ஒருங்கிணைப்பாளா் இணைந்து இக்கூட்டத்தை கூட்டலாம். கூட்டத்திற்கு 15 தினங்களுக்கு முன்பு உறுப்பினா்களுக்கு நோட்டீஸ் அளிக்க வேண்டும். செயற்குழுவில் கட்சியின் பல்வேறு பிரிவுகளைச் சோ்ந்த செயலா்கள் இடம்பெற்றுள்ளனா். இதுவும் பொதுக் குழுவின் ஒரு அங்கமாகும் என்று அவா் தெரிவித்தாா்.