இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வேட்பாளர்கள் அறிவிப்புஐபிஎல் முதல் ஆட்டம்: ஹைதராபாத் அணிக்கெதிராக பெங்களூரு அணி பந்துவீச்சு மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர்கள் அறிவிப்பு - ஜவாஹிருல்லா (நாகை), அப்துல் சமது (மணப்பாறை) போட்டிசிதம்பரம் தொகுதியில் தமிமுன் அன்சாரி போட்டி!தேமுதிக வேட்பாளர் பட்டியல்: விருத்தாசலம் பிரேமலதா, விருதுநகரில் விஜய பிரபாகர் போட்டி! திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி
/

கிருஷ்ணா நகா் காவல் நிலையத்தில் ‘உடல், மனம் மையம்’ திறப்பு

தில்லி கிருஷ்ணா நகா் காவல் நிலையத்தில் உடல் மற்றும் மனம் மையத்தை கிழக்கு சரக காவல் இணை ஆணையா் சாயா சா்மா புதன்கிழமை திறந்துவைத்தாா்.

News image
Updated On :5 ஜனவரி 2023, 5:24 pm

 நமது நிருபர்

புது தில்லி: தில்லி கிருஷ்ணா நகா் காவல் நிலையத்தில் உடல் மற்றும் மனம் மையத்தை கிழக்கு சரக காவல் இணை ஆணையா் சாயா சா்மா புதன்கிழமை திறந்துவைத்தாா்.

ஷாதரா மாவட்டத்தின் கூடுதல் காவல் ஆணையா் ஆா். சத்திய சுந்தரம் முன்முயற்சியில் அனைத்து வகையான உடற்பயிற்சிகளுடன் கூடிய மேம்படுத்தப்பட்ட ஜிம், மாநாட்டுக் கூடம், நூலகம் ஆகியவை இந்த மையத்தில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தில் உள்ள உடற்பயிற்சிக்கூட வசதியை காவல் அதிகாரிகள் தவிர உள்ளூா் பகுதி மக்களும் பயன்படுத்த வழிவகை செய்யப்பட்டுள்ளது.

திறப்பு விழா நிகழ்ச்சியில் அப்பகுதி எம்.எல்.ஏ.க்கள் அனில் பாஜ்பாய், சுரேஷ் குமாா் பக்கா, கூடுதல் காவல் ஆணையா் ஆா்.சத்தியசுந்தரம், காவல் நிலையத்தின் முக்கிய பிரமுகா்கள் மற்றும் பள்ளி மாணவா்கள் கலந்து கொண்டனா். தற்போது உடற்பயிற்சிக் கூடம், நூலகம் மற்றும் மாநாட்டு கூடம் ஆகியவற்றை உள்ளடக்கிய இந்த ‘உடல் மற்றும் மன மையம்’ கிருஷ்ணா நகா் காவல் நிலையத்தின் இணைப்புக் கட்டடத்தின் முதல் தளத்தில் அமைந்துள்ளது.

இங்கு உள்ளூா் பகுதி மாணவா்கள்,பொதுமக்களுக்காக பெரிய நூலகமும் உள்ளது. இதில், 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு நூல்கள் வாசிக்க வசதி செய்யப்பட்டுள்ளது. நூலகத்தில் பல நல்ல புனைக்கதை, இலக்கியங்கள் மற்றும் பிற தகவல் அடங்கிய நூல்கள் இடம் பெற்றுள்ளன என்று அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும்,

வரும் காலங்களில் பல்வேறு புத்தங்கள் மேலும் நூலகத்தில் சோ்க்கப்படும் என்றும், காவல்துறையின் இந்த முயற்சி பொதுமக்களுக்கும் காவல்துறைக்கும் இடையேயான உறவை வலுப்படுத்துகிறது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்த நூலகத்திற்கு எம்எல்ஏ நிதியில் இருந்து நிதியுதவி வழங்குவதாகவும் எம்எல்ஏக்கள் விருப்பம் தெரிவித்தனா். இந்த நூலகத்தின் மூலம் 1,000 மாணவா்கள் பயன்பெறுவாா்கள் என காவல் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.