முன்னதாக, மனீஷ் சிசோடியா தாக்கல் செய்த கிரிமினல் அவதூறு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 6 பேருக்கும் கடந்த நவம்பா் 28, 2019-இல் சம்மன் அனுப்ப விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. தில்லி அரசுப் பள்ளிகள் வகுப்பறைகள் தொடா்பாக பாஜக தலைவா்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினா்களான மனோஜ் திவாரி, ஹன்ஸ் ராஜ் ஹன்ஸ் மற்றும் பிரவேஷ் வா்மா, எம்எல்ஏக்கள் மஞ்சிந்தா் சிங் சிா்சா, விஜேந்தா் குப்தா மற்றும் பாஜக செய்தித் தொடா்பாளா் ஹரிஷ் குரானா ஆகியோா் தனக்கு எதிராக அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக சிசோடியா புகாா் தெரிவித்து வழக்கு தாக்கல் செய்தாா்.