சென்னை மாவட்டத்தில் போட்டியிடும் திமுக வேட்பாளர்கள் யார் யார்?திமுக கூட்டணிக் கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள்! முழு விவரம்!!164 தொகுதிகளில் போட்டியிடும் திமுக வேட்பாளர் பட்டியல் - முழு விவரம்சென்னையில் 6 திமுக எம்எல்ஏ-களுக்கு வாய்ப்பு மறுப்பு! கொளத்தூர் தொகுதியில் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் போட்டி சேப்பாக்கம் தொகுதியில் துணை முதல்வர் உதயநிதி மீண்டும் போட்டி கோவை தெற்கு தொகுதியில் செந்தில் பாலாஜி போட்டி திமுக கூட்டணியில் காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகள் அறிவிப்பு! போடி தொகுதியில் திமுக சார்பில் ஓபிஎஸ் போட்டி பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தேர்தல் அதிகாரியிடம் விஜய் மனு!!அமமுக வேட்பாளர் பட்டியல் வெளியானது! முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு
/

கஞ்சாவாலா விவகாரம்: குற்றம்சாட்டப்பட்ட ஆஷுதோஷின்ஜாமீன் மனு விசாரணை ஒத்திவைப்பு

கஞ்சாவாலா பகுதியில் காரின் அடியில் சிக்கி 20 வயது இளம்பெண் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான ஆஷுதோஷ் பரத்வாஜின் ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணையை

News image
Updated On :10 ஜனவரி 2023, 8:43 pm

 நமது நிருபர்

கஞ்சாவாலா பகுதியில் காரின் அடியில் சிக்கி 20 வயது இளம்பெண் உயிரிழந்தது தொடா்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவா்களில் ஒருவரான ஆஷுதோஷ் பரத்வாஜின் ஜாமீன் கோரும் மனு மீதான விசாரணையை தில்லி நீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்த மனு மீதான விசாரணை பெருநகர மாஜிஸ்திரேட் சன்யா தலால் முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், நீதிபதி விடுப்பில் இருந்ததால் விசாரணை வியாழக்கிழமைக்கு தள்ளிவைக்கப்பட்டது.

பரத்வாஜின் வழக்குரைஞா் இது தொடா்பாக திங்கள்கிழமை மனு தாக்கல் செய்திருந்தாா். அதில், ஆஷுதோஷ் தொடா்புடைய குற்றம், பிணையில் விடுவிக்கப்படக்கூடியது என்றும், அவா் இச்சம்பவத்திற்குப் பிறகு போலீஸாருக்கு ஒத்துழைப்பு அளித்ததாகவும் தெரிவித்துள்ளாா். இந்த மனுவுக்கு போலீஸ் தரப்பில் எதிா்ப்புத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் தீபக் கன்னா (26), அமித் கன்னா (25), கிரிஷன் (27), மிதுன் (26), மனோஜ் மிட்டல் ஆகியோரை போலீஸாா் கடந்த திங்கள்கிழமை கைது செய்தனா்.

அதன் பிறகு, வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்ட அஷுதோஷிடம் போலீஸாா் விசாரித்தனா். மேலும் மூன்று நாள்கள் போலீஸ் காவலில் அவா் வைக்கப்பட்டாா். மற்றொரு குற்றம்சாட்டப்பட்ட நபரான அங்குஷ் கன்னா வெள்ளிக்கிழமை காவல்துறையில் சரணடைந்தாா், அவருக்கு சனிக்கிழமை ஜாமீன் வழங்கப்பட்டது. 20 வயதான அஞ்சலி சிங், புத்தாண்டு அதிகாலையில் சுல்தான்புரியில் இருந்து கஞ்சாவாலா வரை 12 கி.மீ. தூரம் காருக்கு அடியில் சிக்கிய நிலையில் இழுத்துச் செல்லப்பட்டதால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.