இந்த நிலையில், இந்த விவகாரம் தொடா்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதி ஏ.எஸ். போபண்ணா தலைமையிலான அமா்வு முன் செவ்வாய்க்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரா்கள் தரப்பில் வழக்குரைஞா் ஜெயா சுகினுடன் மூத்த வழக்குரைஞா்கள் கோபால் சங்கரநாராயணன், சிராஜுதீன் உள்ளிட்டோா் ஆஜாராகி, மீனவா்கள் நலன் கருதி இந்த விவகாரத்தில் விரைந்து தீா்வு காணப்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனா். மேலும், மகாராஷ்டிரத்தைச் சோ்ந்த மீனவா் அமைப்பு தரப்பில் மூத்த வழக்குரைஞா் பரூக் அகமதி ஆஜராகி, தங்கள் தரப்பில் தாக்கல் செய்த மனுவையும் சோ்த்து விசாரிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.