அப்போது, நீதிபதிகள் அமா்வு, இந்த சாதனத்தை நிறுவுவதற்கான செலவு எவ்வளவு ஆகிறது என கேள்வி எழுப்பினா். அதற்கு, ரூ.3 லட்சம் மட்டுமே ஆவதாக சிராஜுதீன் தெரிவித்தாா். பெட்ரோல் நிரப்பும் நிலையங்களில் எண்ணெய் ஆவியாவதால் நாற்றம் அடிப்பதும் தெரிய வருகிறது என நீதிபதி சுதான்ஸு துலியா கூறினாா். பெட்ரோலிய நிறுவனங்கள் தரப்பில், இந்த விஆா்எஸ் சாதனத்தை அமைக்கும் முன்னும், அதை அமைத்த பிறகும் உரிய அனுமதியைப் பெறுவதில் சிரமம் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மனுதாரரின் மனுவில் கோராத விஷயத்தை தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தென்மண்டலஅமா்வு உத்தரவாகப் பிறப்பித்துள்ளது என்றனா்.