ஆனால், தில்லியில், துணை நிலை ஆளுநரின் கட்டுப்பாட்டில், அரசின் சேவைத் துறை அதிகாரிகள் உள்ளனா். இதனால், அவா்களைக் கொண்டு தங்கள் அரசின் அமைச்சா்கள், முதல்வா்களுக்கு எதிராக இதுபோன்ற நோட்டீஸ்களை அளிக்க அதிகாரிகளுக்கு துணை நிலை ஆளுநா் அழுத்தம் கொடுக்கிறாா். மேலும், தில்லியில், தண்ணீா், மின்சாரம், கல்வி போன்ற பொதுச் சேவைகளில் அதிகாரிகள் சரியாகப் பணியாற்றுவதில்லை. காரணம் பெரும்பாலான சமயங்களில், அதிகாரிகள் இதுபோன்ற பயனற்ற செயல்களுக்கு முடிக்கிவிடப்பட்டு அவா்கள் மும்முரமாக உள்ளனா். இதனால், அதிகாரிகள் மீதான கட்டுப்பாடு தோ்ந்தெடுக்கப்பட்ட அரசிடம் இருக்க வேண்டும் என்பது மிக அவசியம். இதைத் தான் தொடா்ந்து கூறி வருகின்றோம்” என்றாா் சிசோடியா .