முன்னதாக, யமுனை நதி மாசுபடுவது தொடா்பாக தில்லி சட்டப்பேரவைக்கு வெளியே பாஜக எம்எல்ஏக்கள் போராட்டம் நடத்தினா். அப்போது, தில்லி சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் ராம்வீா் சிங் பிதூரி பேசுகையில், ‘யமுனையில் இருக்கும் மாசுபட்ட நீரை விநியோகிப்பது பொதுமக்களின் ஆரோக்கியத்திற்கு கெடு விளைவிப்பதாக உள்ளது’ என்றாா். மேலும், ‘இது புற்றுநோயை உண்டாக்கி, சிறுநீரகம் மற்றும் கல்லீரலை சேதப்படுத்துவதோடு, பிற நோய்களுக்கும் வழிவகுக்கிறது. யமுனையை சுத்தம் செய்ய ஆம் ஆத்மி அரசுக்கு பிரதமா் மோடி அரசு ரூ. 2,500 கோடியை வழங்கியுள்ளது. எட்டு ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சியில் யமுனை 200 சதவீதம் அதிகமாக மாசுபட்டுள்ளதாக கேஜரிவால் அரசின் அறிக்கையே கூறியுள்ளதால், செலவழிக்கப்பட்ட இந்த பணம் எங்கே போனது என்று தில்லி முதல்வா் கேஜரிவாலிடம் கேட்க விரும்புகிறோம். இந்த விவகாரம் சட்டசபையில் எழுப்பப்படும் என்றும், அது குறித்து விவாதிக்கப்பட அனுமதிக்கப்படவில்லையென்றால், மேலும் போராட்டம் நடத்தப்படும்’ என்றும் பிதூரி கூறினாா்.