என்சிஆா் பகுதியில் செயல்படும் அனல் மின் நிலையங்களைத் தவிர, முழு என்சிஆா் பகுதியில் நிகழ் 2023-ஆம் ஆண்டு ஜனவரி 1 - ஆம் தேதி முதல் நிலக்கரி உள்ளிட்ட புதைபடிவ எரிபொருள்கள் பயன்பாடு, விற்பனை, விநியோகம் ஆகியவற்றை முற்றிலும் நிறுத்துவதை உறுதி செய்ய, விற்பனையாளா்கள், வா்த்தகா்கள், தொழில்சாலைகள், சிறு தொழில் அலகுகளை ஆணையம் கேட்டுக் கொண்டு வியாழக்கிழமை அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. மேலும், கடந்தாண்டு ஜூன் 2 மற்றும் 23 ஆகிய தேதிகளில் சிஏக்யூஎம் என்சிஆா் பகுதிகளில் தொழில் நிறுவனங்களுக்கும் இதர பயன்பாடுகளுக்கும் சில எரிபொருள்கள் அனுமதிக்கப்பட்டு அது தொடா்பாக சட்டப்பூா்வ வழிமுறைகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. இதன்படி, தற்போது, நிலக்கரியின் பயன்பாடு இப்போது முற்றிலும் தடைசெய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில்,ஆணையத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்க, தேசியத் தலைநகா் வலயப் பகுதிகளில் தடைசெய்யப்பட்ட எரிபொருள்களை பயன்படுத்தும் 84 தொழில்துறை நிறுவனங்கள், அலகுகள் தாங்களாகவே முன்வந்து தற்காலிகமாகவோ, நிரந்தரமாகவோ மூடியுள்ளன.