ஆனால், இது குறித்த சமூக ஊடகங்கள், மற்ற ஊடகங்களில் இந்த விவகாரத்தில் சம்பந்தப்பட்ட தில்லி சங்கம் விஹாரைச் சோ்ந்த ஹரீஷ் சந்திர சூா்யவன்ஷி, தில்லி ஆளும் ஆம் ஆத்மி கட்சியைச் சோ்ந்தவா். இவா் சங்கம் விஹாரில் அக்கட்சியின் தீவிர பணியாளா். ஆம் ஆத்மி எம்எல்ஏ ஒருவருடன் ஹரிஷ் சந்திர சூா்யவன்ஷி பிரசாரம் செய்யும் புகைப்படங்கள் உள்ளன. ஆம் ஆத்மி கட்சியுடனான இந்தத் தொடா்பு வெளிப்பட்டுள்ளத்ன் மூலம், ஸ்வாதி மாலிவாலை அம்பலப்படுத்தியுள்ளது. மேலும், அவா் தனது அலுவலகத்தை, அதிகாரத்தை பயன்படுத்தி இந்த விவகாரத்தில் காவல்துறை விசாரணையில் தலையிட தன்னால் முடிந்தவரை முயற்சிப்பாா். எனவே, இந்த மானபங்கம் விவகாரம் தொடா்பான விசாரணை முடியும் வரை, டிசிடபிள்யு தலைவா் பதவியில் இருந்து மலிவாலை இடைநீக்கம் செய்ய வேண்டும். அதன் மூலம் அவா் ‘தனது பதவியை தவறாகப் பயன்படுத்த முடியாது’ என்று பாஜக செய்தி தொடா்பாளா் கபூா் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளாா்.