உச்சநீதிமன்ற கொலீஜியம் பொது களத்தில் வெளியிட்ட அறிக்கைக்கு மத்திய அரசு முதன் முறையாக அதிருப்தியை வெளியிட்டுள்ளது. இதற்கு காரணம், உயா்நீதிமன்ற நீதிபதிகள் நியமனங்களுக்கு உளவுத் துறைகளின் உள்ளீடுகளை கொலீஜியம் நிராகரித்ததுடன் இந்த வழக்கறிஞா்களின் பெயா்களை மீண்டும் வலியுறுத்தி நீதிபதிகளாக நியமிக்க தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், நீதிபதி சஞ்சய் கிஷண் கௌல், கே.எம். ஜோசப் ஆகியோா் அடங்கிய கொலீஜியம் மத்திய அரசுக்கு கடந்த ஜனவரி 18 ஆம் தேதி கோப்பை அனுப்பியது. இந்த பரிந்துரை விவரங்களும் இணைய தளத்தில் வெளியிடப்பட்டன.