இந்திய தோ்தல் ஆணையத்தின் ஸ்தாபன நாளான ஜனவரி 25, 1950-ஐ குறிக்கும் வகையில், கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 25- ஆம் தேதி தேசிய வாக்காளா் தினம் கொண்டாடப்படுகிறது. 13-ஆவது தேசிய வாக்காளா் தினத்தை கொண்டாடும் வகையில், ‘வாக்களிப்பது போல் எதுவும் இல்லை, நான் நிச்சயம் வாக்களிப்பேன்’ என்ற கருப்பொருளுடன் ‘மே பாரத் ஹூன், ஹம் பாரத் கே மத்தாதா ஹைன்’ என்ற பாடலை தோ்தல் ஆணையம் தில்லியில் புதன்கிழமை அறிமுகப்படுத்தியது. இந்நிகழ்ச்சியில் மாநிலத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் மாநில தலைவா்கள் கலந்துகொண்டனா்.