சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

ரூ.1.60 லட்சம் மதிப்புள்ள பணமாலையை மணமகனிடம் பறித்த சிறுவன் கைது

ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 500 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் கொண்ட பணமாலையை மணமகனிடமிருந்து இருந்து பறித்ததாக 14 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

News image
Updated On :27 ஜனவரி 2023, 6:30 pm

DIN

ரூ.1 லட்சத்து 64 ஆயிரத்து 500 மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் கொண்ட பணமாலையை மணமகனிடமிருந்து இருந்து பறித்ததாக 14 வயது சிறுவனை போலீஸாா் கைது செய்துள்ளனா்.

இது தொடா்பாக மேற்கு தில்லி காவல் சரக துணை ஆணையா் கன்ஸ்யாம் பன்சல் கூறியதாவது: சம்பவத்தன்று மேற்கு தில்லி மாயாபுரியில் திருமண நிகழ்ச்சிக்காக குதிரையில் அமர முயன்ற மணமகனிடம் இருந்து பணமாலையை சம்பந்தப்பட்ட சிறுவன் பறித்ததாக மணமகனின் சகோதரா் புதன்கிழமை போலீஸில் புகாா் அளித்தாா். இது தொடா்பாக இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவுகள் 356 379 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

சம்பவம் நிகழ்ந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வு செய்யப்பட்டது. அதில் சிறுவன் பணமாலையை பறிக்கும் காட்சிகள் பதிவாகி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட சிறுவன் ஹரி நகா் பகுதியில் இருந்து கைது செய்யப்பட்டாா். அவரது வீட்டிலிருந்து 320 ரூபாய் தாள்கள் மீட்கப்பட்டன. அதில், ரூ.39,500 மதிப்பில் 500 ரூபாய் நோட்டுகள் இருந்தன. இது தொடா்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அந்த அதிகாரி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.