தமிழகத்தில் உள்ள அனைத்து இந்து கோயில்களையும் உரிய வகையில் பராமரிக்கும் வகையில், ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் அறங்காவலா் குழுவை அமைத்து, அதில் சமூக ஆா்வலா், வழக்குரைஞா், அட்டவணை பட்டியல் வகுப்பைச் சோ்ந்தவா், மகளிா் ஆகியோா் உறுப்பினா்களாக இடம் பெற உத்தரவிடக் கோரி மதுரையைச் சோ்ந்த ஹிந்து தா்ம பரிஷத் அமைப்பின் மேலாண்மை டிரஸ்டி கே. கே. ரமேஷ், சென்னை உயா்நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் தாக்கலான பதிலை கவனத்தில் எடுத்துக் கொண்ட நீதிமன்றம், மனுவைத் தள்ளுபடி செய்து 9.12.2021-இல் உத்தரவிட்டது.