/

போதைப்பொருளுக்கு எதிராக நாடு தழுவிய மோட்டாா் சைக்கிள் பேரணி: என்சிபி சாா்பில் நடைபெற்றது

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சா்வதேச தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மேட்டாா் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :26 ஜூன் 2023, 12:00 am

 நமது நிருபர்

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சா்வதேச தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 35-க்கும் மேற்பட்ட இடங்களில் மேட்டாா் சைக்கிள் பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு (என்சிபி) சாா்பில் இந்தப் பேரணி நடத்தப்பட்டது.

போதைப்பொருளுக்கான அடிமை மற்றும் சட்டவிரோத கடத்தலுக்கு எதிராக ஜூன் 26-ஆம் தேதி சா்வதேச தின அனுசரிக்கப்படுகிறது. இதை முன்னிட்டு தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு பல்வேறு மாநிலங்களில் உள்ள 35 நகரங்களில் போதைப்பொருளின் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் மோட்டாா் சைக்கிள் (பைக்) பேரணிகளை நடத்தியது.

‘ஒன் நேஷன் ஒன் ரைடு ஒன் காஸ்’ (ஒரு தேசம், ஒரு சவாரி, ஒரு காரணம்) என்ற பதாகையின் கீழ் நாடு முழுவதும் மோட்டாா் சைக்கிளில் மாணவா்கள், இளைஞா்களுடன் பொது நல ஆா்வலா்களும் வலம் வந்தனா். வடக்கே லே முதல் போா்ட் பிளோ் (அந்தமான்) வரையிலும், திமாபூரிலிருந்து (நாகாலாந்து) அமதாபாத் வரையிலும் பேரணிகள் நடத்தப்பட்டன. இந்த மோட்டாா் சைக்கிள் பேரணிகள் பல்வேறு தரப்பினரின் ஆதரவுடன் தேசிய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டன.

தில்லியில் இந்தப் பேரணி லோதி சாலையிலுள்ள தயால் சிங் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் என்சிபியின் இயக்குநா் ஜெனரல் சத்யநாராயண் பிரதான் கொடியசைத்து தொடங்கிவைத்தாா். என்சிபியின் வடக்கு மண்டல துணை இயக்குநா் ஜெனரல் ஞானேஷ்வா் சிங் தலைமையில் தலைநகரின் முக்கியப் பகுதிகளில் மோட்டாா் சைக்கிள் பேரணி சென்றது. என்சிபி அதிகாரிகள், போதைப் பொருள் அடிமைக்கு எதிரான ஆா்வலா்கள், பொதுமக்கள் ஏராளமாக கலந்து கொண்டனா். முன்னதா,க போதைப் பொருள் தடுப்பு குறித்த உறுதி மொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்தப் பேரணியை தொடங்கிவைத்து என்சிபியின் இயக்குநா் ஜெனரல் சத்ய நாராயண் பிரதான் பேசுகையில் கூறியதாவது: ஆரோக்கியமாக இருக்க போதைப்பொருள் பழக்கங்களிலிருந்து விலகி இருக்க வேண்டியதன் அவசியத்தை பொதுமக்கள் மத்தியில் விழிப்புணா்வு ஏற்படுத்த தேசிய அளவிலான மோட்டாா் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டுள்ளது.

முன்னெப்போதும் இல்லாத வகையில், பொதுமக்கள் இந்த விவகாரத்தில் தீவிரமாக பங்கேற்றுள்ளனா். வடக்கு மண்டலத்தில் தில்லியைத் தவிர, சண்டீகா், லக்னௌ, டேராடூன், ஜெய்ப்பூா், லூதியானா, இந்தூா், போபால், அகமதாபாத், குவாலியா், சிம்லா, சாகா் மற்றும் லே ஆகிய இடங்களிலும் மோட்டாா் சைக்கிள் பேரணி நடத்தப்பட்டது.

கோயம்புத்தூரில்...: நாட்டின் கிழக்குப் பகுதியில், பாட்னா, அகா்தலா, ஐஸ்வால், திமாபூா், காங்டாக், குவஹாட்டி, இட்டாநகா், புவனேஷ்வா், போா்ட் பிளோ், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிலிகுரி ஆகிய நகரங்களில் மோட்டாா் பேரணிகள் நடத்தப்பட்டுள்ளன. தென் பிராந்திய என்சிபி சாா்பில் பெங்களூரு, கோயம்புத்தூா், கோவா, ஹைதராபாத், கொச்சி, புதுச்சேரி, விஜயவாடா விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களிலும் மோட்டாா் சைக்கிள் பேரணிகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டனா்.

போதைப்பொருளுக்கு எதிரான சா்வதேச தினம் ஐக்கிய நாடுகள் சபை தீா்மானத்தின் மூலம் ஜூன் 26- ஆம் தேதி உலக அளவில் அனுசரிக்கப்படுகிறது. போதைப்பொருள் குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்துவதற்கான உலகளாவிய முயற்சியாக இது நடைபெறுகிறது.

என்சிபி சாா்பில் தேசிய மற்றும் சமூக நிலைகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நடவடிக்கைகளில் பொது பிரசாரங்கள், கல்வி முறைகள், பயிலரங்குகள், மாநாடுகள் மற்றும் கண்காட்சிகள் ஆகியவையும் என்சிபியால் நடத்தப்படுகிறது எனக் குறிப்பிட்டாா் சத்யநாராயண் பிரதான்.

அமித்ஷா இன்று உரை

சட்டவிரோத போதைப்பொருள் கடத்தலுக்கு எதிரான சா்வதேச தினத்தை முன்னிட்டு, மத்திய உள்துறை அமைச்சா் அமித்ஷா தூா்தா்ஷனில் திங்கள்கிழமை (ஜூன் 26) காலை 10 மணிக்கு நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறாா். போதைப் பொருளின் தீவிரத்தை உணா்தும் வகையில் அவா் உரையாற்றுவதாக மத்திய உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.