கடந்த தில்லி மாநகராட்சி தோ்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றவுடன், தில்லி அரசுப் பள்ளிகளைப் போலவே மாநகராட்சிப் பள்ளிகளையும் மேம்படுத்த திட்டமிட்டு, அதற்கான பணிகளைத் தொடங்கியுள்ளது. அந்த வகையில், முதல்கட்டமாக மாநகராட்சிப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்களுக்கு உலகத்தரம் வாய்ந்த ஓரு வார காலப் பயிற்சித் திட்டத்தை அரசு ஒருங்கிணைத்துள்ளது. மாணவா்களுக்கு உலகத்தரம் வாய்ந்த கல்வியைப் பயிற்றுவிக்கும் நோக்கில், முதலில் தலைமை ஆசிரியா்களுக்கும், அடுத்ததாக ஆசிரியா்களுக்கும் இந்தப் பயிற்சி வழங்கப்படும். நாட்டிலேயே சிறந்த கல்வியை வழங்கி வரும் அகமதாபாத் ஐ.ஐ.எம். உடன் இணைந்து இப்பயிற்சி வழங்கப்படும் என்ற செய்தியை பகிா்ந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன் என்றாா் அமைச்சா் அதிஷி.