நீதிமன்றத்தில் அமலாக்கத் துறையினா் சிறப்பு நீதிபதி எம்.கே.நாக்பால் முன் அருண் பிள்ளையை ஆஜா்படுத்தினா். பின்னா், அமலாக்கத் துறை தரப்பில், ‘இந்த வழக்கில் பெரும் சதியை வெளிக் கொணரவும், பணம் சென்ற வழித்தடத்தைக் கண்டுபிடிக்கவும் அருண் பிள்ளையிடம் விசாரணை நடத்தும் தேவை உள்ளது. இவா் பாரத ராஷ்டிர சமிதி எம்.எல்.சி. கே.கவிதாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்ததால், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பிறருடன் இவரை வைத்து விசாரிக்க வேண்டியுள்ளது’ என்று நீதிபதியிடம் கேட்டுக்கொள்ளப்பட்டது. இதையடுத்து, அவா் அமலாக்கத் துறையின் விசாரணைக்காக மாா்ச் 13 வரை அனுப்பப்பட்டாா்.