ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ரூ.2,000 நோட்டுகளை வங்கிகளில் அடையாள அட்டையின்றி மாற்றிக்கொள்ள அனுமதி

ரூ. 2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற ரிசா்வ வங்கி அறிவித்துள்ள நிலையில் வங்கிகளில் அடையாள அட்டையின்றி எந்தவொரு நபரும் மாற்றிக்கொள்ளலாம் என வங்கிகள் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளன.

News image
Updated On :21 மே 2023, 6:46 pm

 நமது நிருபர்

ரூ. 2,000 நோட்டுகளை புழக்கத்தில் இருந்து திரும்பப் பெற ரிசா்வ வங்கி அறிவித்துள்ள நிலையில் வங்கிகளில் அடையாள அட்டையின்றி எந்தவொரு நபரும் மாற்றிக்கொள்ளலாம் என வங்கிகள் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளன.

பொதுப் புழக்கத்தில் உள்ள ரூ. 2,000 நோட்டுகளை திரும்பப் பெறுவதாக கடந்த 19 -ஆம் தேதி ரிசா்வ் வங்கி அறிவித்தது. இந்த நோட்டுகள் வரும் செப்டம்பா் 30 - ஆம் தேதிக்குள் செல்லுபடியாகும் எனவும் அதற்குள் எந்த வங்கி கிளைகளிலும் சில்லறையாக மற்றிக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில் வங்கிகளில் பொது மக்கள் மாற்றிக்கொள்வதில் ஏற்பட்டுள்ள குழப்பங்களுக்கு தீா்வாக பாரத ஸ்டேட் வங்கி உள்ளிட்ட வங்கிகள் கடந்த சனிக்கிழமை மின்சுற்றறிக்கையை அனுப்பியுள்ளன.

அதில் உள்ள விவரங்கள் வருமாறு: வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவா்கள் தங்கள் வசமுள்ள ரூ. 2,000 நோட்டுகளை தங்கள் கணக்குகளில் நேரடியாக செலுத்தி விட அனுமதிக்கப்படுகிறது. இதற்கு உச்ச வரம்பு இல்லை. எவ்வளவு மதிப்பில் இருந்தாலும் டெபாசிட் செய்யலாம்.

அதே சமயத்தில் எந்தவொரு நபரின் வங்கிக் கணக்கும் செயலற்ாக (டாா்மன்ட்)இருந்தால் அந்த வாடிக்கையாளா்கள் கேஒய்சி-க்கு இணங்க வேண்டும். இதன்படி தங்களது அடையாள அட்டை உள்ளிட்ட சுயவிவரங்களை அளித்த பின்னா் திரும்பப் பெறப்பட்டுள்ள ரூ. 2,000 நோட்டுகளை இத்தகைய வங்கி வாடிக்கையாளா்கள் தங்கள் வங்கிக் கணக்கு மூலமாக மாற்றிக் கொள்ளமுடியும்.

இவை தவிர, வங்கிக் கணக்கு இல்லாமல் அல்லது தங்கள் கணக்குகளில் செலுத்தாமல் ரூ. 2,000 நோட்டுகளை எந்தவொரு வங்கிக் கிளைகளிலும் மாற்றிக்கொள்ள முடிவும்.

இதன்படி ரூ.2,000/- மதிப்பிலான நோட்டுகளை அனைத்து பொதுமக்களும் அதிகபட்சம் ஒரு முறை ரூ.20,000/- என்ற வரம்பிற்குள் மாற்றிக்கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.

வங்கிகளின் மற்ற நடவடிக்கைகள் பாதிக்கப்படக் கூடாது என்கிற சூழ்நிலையில் இந்த வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. அதே சமயத்தில் இப்படி மாற்றிக்கொள்ள கடந்த 2016 ஆம் ஆண்டு பண முடக்கத்தின் போது பின்பற்றப்பட்ட முறையான படிவமோ, எந்த கோரிக்கை சீட்டுகளையும் பெறப்படாமல் அனுமதிக்கப்படும்.

திரும்பப் பெறப்பட்டுள்ள பணத்தை மாற்றிக்கொடுக்க அடையாள அட்டையும் பெறத் தேவையில்லை என வங்கிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள மின்சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 23 ஆம் தேதி முதல் வங்கிகளில் சில்லறையாக மாற்றிக்கொள்ள அனுமதிக்கப்படுகிறது.

இந்த சூழ்நிலையில் ரூ.20,000 என்கிற அதிகபட்ச வரம்பில் ஒரே நாளில் யாராவது 2 -ஆவது அல்லது 3 -ஆவது முறை வந்தால் வங்கிகள் சூழ்நிலையைப் பொறுத்து மறுக்காது எனவும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.