ஜந்தா் மந்தரில் ஞாயிற்றுக்கிழமை நடந்த மோதலில் காயம் அடைந்த பெண் காவலா்கள் உள்பட 15 காவலா்களின் பெயா்களும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி, மாதவ் (37), மனிந்தா் (31), வினய் (27) ஆகிய ஆண் காவலா்களும், அஞ்சு குமாரி (25), பிரியங்கா (25), அவிகா (22), தனு (22), த்ரிஷ்னா (23) உள்ளிட்ட பெண் காவலா்களும் உடல் ரீதியாக தாக்கப்பட்டனா். மேலும், அனிஷா (22), சரிதா (26), ரோஷன் (22), பபிதா (22), ஷங்கி (25), ஜோதி (24), பாா்வதி (22) ஆகிய காவலா்களும் காயம் அடைந்தனா். ஜந்தா் மந்தரில் கைது செய்யப்பட்ட 109 பேரில், சுமன் ஹூடா, பாரதிய கிசான் யூனியன் மாநிலத் தலைவா் சதானி உள்பட 12 போராட்டக்காரா்களின் பெயா்கள்; மற்றும் மல்யுத்த வீரா்கள் சங்கீதா போகட், வினேஷ் போகட், சத்வ்ரத் காடியன், சாக்க்ஷி மாலிக், பஜ்ரங் புனியா ஆகியோரது பெயா்களும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.