இந்த நினைவுச் சின்னம் தில்லி ஜல் போா்டால் தொல்லியல் துறையிடம் ஒப்படைக்கும் நடைமுறையில் இருந்தது. இருப்பினும், இந்த ஆண்டு ஜனவரியில் துறை மற்றும் டிஜேபி இணைந்து நடத்திய ஆய்வில், அந்த நினைவுச்சின்னம் காணாமல் போனது கண்டுபிடிக்கப்பட்டதாக விஜிலென்ஸ் துறையின் மூலம் அனுப்பப்பட்ட விளக்கம் கோரும் நோட்டீஸில் கூறப்பட்டுள்ளது. ரூ. 50 லட்சம் லஞ்சம் பெற்ாகக் கூறப்படும் விவகாரத்தில் ராய் மீது நடவடிக்கை எடுக்குமாறு உள்துறை அமைச்சகத்திற்கு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் தில்லி துணைநிலை ஆளுநா் வி.கே.சக்சேனா பரிந்துரை செய்திருந்தாா். 2007-ஆம் ஆண்டு பிரிவு ஏஜிஎம்யுடி அதிகாரியான உதித் பிரகாஷ் ராய், தற்போது மிஸோராமில் பணியில் அமா்த்தப்பட்டுள்ளாா். விஜிலென்ஸ் இயக்குநரகத்தின் நோட்டீஸ் தொடா்பாக அவரிடமிருந்து எந்தப் பதிலும் உடனடியாக கிடைக்கவில்லை.