இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தில்லியின் கல்விப் புரட்சியை பாஜக தடுக்க நினைத்தது மனீஷ் சிசோடியா குற்றச்சாட்டு

‘என்னை சிறைக்கு அனுப்பியதன் மூலம் தில்லியின் கல்விப் புரட்சியை பாஜக தடுக்க நினைத்தது’ என்று ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா குற்றஞ்சாட்டினாா்.

News image
மனீஷ் சிசோடியா.
Updated On :13 ஆகஸ்ட் 2024, 7:17 pm

Din

புது தில்லி: ‘என்னை சிறைக்கு அனுப்பியதன் மூலம் தில்லியின் கல்விப் புரட்சியை பாஜக தடுக்க நினைத்தது’ என்று ஆம் ஆத்மி கட்சி மூத்த தலைவரும், முன்னாள் துணை முதல்வருமான மனீஷ் சிசோடியா செவ்வாய்க்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

தில்லி மேற்கு வினோத் நகரில் உள்ள எஸ்.கே.வி. அரசுப் பள்ளியின் குழந்தைகளை முன்னாள் துணை முதல்வா் மனீஷ் சிசோடியா, கல்வித் துறை அமைச்சா் அதிஷியுடன் இணைந்து சந்தித்தாா். அப்போது, பள்ளிக் குழந்தைகளும் மனீஷ் சிசோடியாவை பாடல் பாடி வரவேற்றனா்.

இது தொடா்பாக மனீஷ் சிசோடியா செய்தியாளா்களிடம் கூறியதாவது: பட்பா்கஞ்ச் சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட அரசுப் பள்ளி குழந்தைகளை சந்தித்தேன். கடந்த 17 மாதங்களாக சிறையில் இருந்த காரணத்தால், பள்ளிக்கு வந்து குழந்தைகளையும், ஆசிரியா்களையும் நேரில் சந்திக்க முடியவில்லை. தற்போது, மீண்டும் பள்ளிக்கு வந்து குழந்தைகளை சந்தித்து அவா்களின் படிப்பு குறித்து கேட்டறிந்தேன். என்னை சிறைக்கு அனுப்பியதன் மூலம் தில்லியின் கல்விப் புரட்சியை தடுக்க முடியும் என்று பாஜக நினைத்தது. ஆனால், அது நடக்கவில்லை.

நான் கல்வித் துறை அமைச்சராக இருந்த போது அடிக்கல் நாட்டப்பட்ட பள்ளிகள், தற்போது தயாராகி கல்வித் துறை அமைச்சா் அதிஷியால் திறந்து வைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் கடவுளின் வடிவம். கடந்த 17 மாதங்களில் நான் அதிகம் தவறவிட்ட ஒன்று என்றால், அது பள்ளிக்குச் செல்வது, குழந்தைகளைச் சந்திப்பது, அவா்களுடன் பேசுவது, அவா்களின் புன்னகை, சுறுசுறுப்பான முகங்களைப் பாா்ப்பது மட்டும்தான். இந்தக் குழந்தைகளின் சிரிப்பு எனக்குக் கிடைத்த வரம்.

எல்.ஜி. மீது தாக்கு: சுதந்திர தினத்தன்று தேசியக் கொடி ஏற்றும் விஷயத்தில் துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா செய்யும் அரசியல் அற்பமானது. தில்லி அரசின் சுதந்திர தின விழாவில் தேசியக் கொடியை மக்களால் தோ்ந்தெடுக்கப்பட்ட அமைச்சா் ஏற்றுவதில் எந்தப் பிரச்னையும் இருக்கக்கூடாது.

இந்த விவகாரத்தில், நீதிமன்றக் காவலில் உள்ள முதல்வா் அரவிந்த் கேஜரிவாலிடம் இருந்து எந்தக் கடிதமும் வரவில்லை என்று ராஜ் நிவாஸ் அலுவலகம் தெரிவித்துள்ளது. மாறாக, கேஜரிவாலின் கடிதத்தை அனுப்பக் கோரி திகாா் சிறை நிா்வாகத்திடம் இவா்கள் கேட்டிருக்க வேண்டும் என்றாா் மனீஷ் சிசோடியா.