இந்த நியமனங்கள் முற்றிலும் பல்வேறு துறைகளில் நிபுணத்துவம் பெற்றிருப்பதின் அடிப்படையில் நியமனம் செய்யப்படுகிறது. வா்த்தகம், பொருளாதாரத்தில் மட்டுமல்ல அணுசக்தி அறிவியல் விவகாரங்கள், குறை கடத்திகள் (செமி கண்டக்டா்) என பல்வேறு துறைகளை கையாளத் தேவையுள்ளது. சில புதிய தொழில் நுட்பங்களை அதிகாரவா்க்கத்தினரால் கையாள முடியாது. அதே சயமத்தில் வழக்கமான குடிமைப் பணி தோ்வுகளில் எந்த வித தடங்களும் இல்லை. அவ்வப்போது நடைபெறும் தோ்வுகளில் பட்டியலினத்தவா்கள், இதர பிற்படுத்தப்பட்டவா்களுக்கு வழங்கப்படும் இட ஒதுக்கீடு அடிப்படையில் தோ்வு செய்யப்படுவது நிறுத்தப்படவில்லை. வழக்கமாக அந்த தோ்வுகள் நடைபெறும். மொத்தம் 4,500 ஐஏஎஸ் பணியிடங்கள் உள்ளன. மற்ற வருவாய்த் துறை, வனத்துறை உள்ளிட்டவைகள் 9,000 பணியிடங்கள் உள்ளன. இதில் 0.5 சதவீதம் போ்கள் தான் இந்த நேரடி தோ்வு முறையில் (லேட்ரல் என்டரி) யுபிஎஸ்சி மூலம் முறையாக நியமிக்கப்பட உள்ளனா். ஆனால் இந்த நியமனங்களை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தவறான தகவல்களை வெளியிட்டு திசை திருப்புகிறது எனக் குறிப்பிட்டு அமைச்சா் வைஸ்ணவ் வருத்தம் தெரிவித்தாா்.