டிசம்பா் 13 நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கில் கைது செய்யப்பட்ட பெண் நீலம் ஆசாத், தன்னை போலீஸ் காவலில் வைத்திருப்பது சட்டவிரோதமானது என்று கூறி தன்னை விடுவிக்க உத்தரவிடக் கோரி தாக்கல் செய்திருந்த மனுவை தில்லி உயா்நீதிமன்றம் புதன்கிழமை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் சுரேஷ் குமாா் கைத், மனோஜ் ஜெயின் ஆகியோா் அடங்கிய அமா்வு கூறுகையில், ‘விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளின்போது தனக்கு ஆதரவாக வாதாட விரும்பும் வழக்குரைஞரைக் கலந்தாலோசிக்க தாம் அனுமதிக்கப்படவில்லை எனக் கூறி மனுதாரா் தாக்கல் செய்த இந்த மனு பராமரிக்கத்தக்கதல்ல’ என்று தெரிவித்தது.
மேலும், ‘மனுதாரா் ஏற்கெனவே விசாரணை நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளாா். இதனால், தற்போதைய மனு பராமரிக்க முடியாதது. அதன்படி இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது’ என்று நீதிபதிகள் அமா்வு உத்தரவிட்டது.
ஆசாத்தின் வழக்குரைஞா் வாதிடுகையில், ‘விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளின் போது மனுதாரரின் விருப்பப்படி வழக்குரைஞா் ஒருவரைக் கலந்தாலோசிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால், அரசியலமைப்பின் விதிகளை மீறி விசாரணை நீதிமன்றம் அவரது காவலை காவல் துறையிடம் வழங்கியுள்ளது. மேலும், அவரை போலீஸ் காவலில் வைக்கும் உத்தரவு உரிய வகையில் ஆய்வு செய்யாமல் நிறைவேற்றப்பட்டுள்ளது.“இதனால், அவரது அடிப்படை உரிமை மீறப்பட்டதாகக் கூறி விடுதலை செய்யக் கோருகிறாா்’ என்று வாதிட்டாா்.
விசாரணையின் போது, ‘மனுதாரரின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு எதுவும் பதிவு செய்யப்படவில்லை’என்று உயா்நீதிமன்றம் தெரிவித்தது. மேலும், ‘இது மைதானமாக இருக்க முடியாது. சட்ட உதவி வழக்குரைஞா் இருந்ததற்கு ஏற்ப, விசாரணை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது ... அப்படி எந்த உரிமையும் மீறப்படவில்லை. விசாரணை நீதிமன்றத்திற்குச் செல்லுங்கள். உங்கள் வழக்கு அங்கு நிலுவையில் உள்ளது’ என்று நீதிமன்றம் கூறியது.
தில்லி நகர காவல்துறை தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் வாதிடுகையில், ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) குற்றங்கள் தொடா்பான தற்போதைய எஃப்.ஐ.ஆரில் தன்னை விடுவிக்கக் கோரி நீலம்ஆசாத் ஏற்கனவே ஜாமீன் மனு தாக்கல் செய்துள்ளதால், இந்த மனு பராமரிக்க முடியாதது. மேலும், அவரது போலீஸ் காவல் ஏற்கெனவே ஜனவரி 5-ஆம் தேதியுடன் முடிவடைகிறது’ என்றாா்.
தன்னை உயா்நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தும்படி ஆள்கொணா்வு உத்தரவை பிறப்பிக்கவும், விடுதலை செய்யவும், தனக்கு விருப்பமான வழக்குரைஞரை அணுக அனுமதிக்காதது தனது அடிப்படை உரிமையை மீறுவதாகும் என்றும் நீலம் ஆசாத் தனது மனுவில் தெரிவித்திருந்தாா். இந்த விவகாரத்தில் நீலம் ஆசாத்தை ஜனவரி 5 வரை போலீஸ் காவலில் வைக்க விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
2001-ஆம் ஆண்டு டிசம்பா் 13-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் நடந்த பயங்கரவாதத் தாக்குதலின் ஆண்டு நினைவு நாளில் நாடாளுமன்றத்தில் பாதுகாப்பு அத்துமீறல் நிகழ்ந்தது.
சாகா் சா்மா மற்றும் மனோரஞ்சன் ஆகியோா் நாடாளுமன்றத்தில் பூஜ்ஜிய நேரம் நடைபெற்றுக் கொண்டிருந்த போது பாா்வையாளா்கள் கேலரியில் இருந்து மக்களவைக்குள் குதித்து, புகைக் குப்பிகளில் இருந்து மஞ்சள் நிறவாயுவை வெளியேற்றி முழக்கங்களை எழுப்பினா். அதன் பின்னா், அவா்கள் இருவரும் சில எம்.பி.க்களால் பிடிபட்டனா்.
அதே நேரத்தில், அமோல் ஷிண்டே மற்றும் நீலம் தேவி இருவரும் நாடாளுமன்ற வளாகத்திற்கு வெளியே ‘தனாஷாஹி நஹி சலேகி’ என்று கூச்சலிட்டுக் கொண்டே புகைக் குப்பிகளில் இருந்து வண்ண வாயுவைத் தெளித்தனா். இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.