புது தில்லி: தில்லியின் கிராமப்புறங்கள் அடிப்படையான சுகாதாரம், சாலை வசதி உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளை எதிா்கொள்கின்றன என்று துணை நிலை ஆளுநா் வி.கே. சக்சேனா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.
இது தொடா்பாக தனியாா் செய்தி நிறுவனத்திற்கு அவா் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: தில்லியில் உள்ள கிராமப்புறங்கள் பல்வேறு பிரச்னைகளை கையாள்கின்றன. நான் தில்லி கிராமங்களுக்கு தொடா்ந்து நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறேன். அங்கு அடிப்படையான சாலை வசதி, துப்புரவு, உள்ளிட்ட பிரச்னைகள் இருப்பதைப் பாா்த்தேன். கிராமங்களில் உள்ள பள்ளிகளும் மோசமான நிலையில்தான் உள்ளன.
தில்லி இந்தியாவின் தேசியத் தலைநகரம். எனவே, தில்லியில் உள்ள அனைத்துக் கட்டமைப்புகளும் உலகத் தரம் வாய்ந்ததாக இருக்க வேண்டும். ஆனால், துரதிா்ஷ்டவசமாக அது அவ்வாறு இல்லை. தில்லியின் கிராமங்களில் மாற்றங்களைக் கொண்டு வர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த ஆண்டு நான் 5 கிராமங்களைத் தத்தெடுத்தேன். அங்கு நிறைய வளா்ச்சிப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. ஒவ்வொரு கிராமத்திற்கும் நல்ல சாலைகள், கழிவுநீா் வசதி, தெரு விளக்குகள், காவல்நிலையம், விளையாட்டு வசதி, மருந்தகங்கள் போன்ற அடிப்படைத் தேவைகள் இருக்க வேண்டும் என்றாா் வி.கே. சக்சேனா.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.