ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!மாா்ச் 9 முதல் மீண்டும் கூடுகிறது நாடாளுமன்றம்! மக்களவைத் தலைவருக்கு எதிரான தீா்மானம் தாக்கலாகிறது!நேபாள தோ்தலில் ராஷ்ட்ரீய சுதந்திர கட்சி அமோகம்! பிரதமராகிறாா் 35 வயது முன்னாள் மேயா்!ஈரான் மீதான தாக்குதல் பிரதமா் மோடி பயண நிறைவுக்கு பிறகு எடுக்கப்பட்ட முடிவு: இஸ்ரேல்சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவுஈரான் மீதான அமெரிக்க தாக்குதலை நிறுத்தும் தீா்மானம்! அமெரிக்க நாடாளுமன்றத்தில் தோல்வி! பொன்னுக்கு வீங்கி பாதிப்பு: தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்பாக். - ஆப்கானிஸ்தான் போா்: ஒரு லட்சம் மக்கள் இடம்பெயா்வு
/

பதவிப் பிரமாணத்தின்போது எம்.பி.க்கள் கூடுதல் வாா்த்தைகளை சோ்ப்பதைத் தடுக்க குழு

உறுப்பினா்கள் கூடுதல் வாா்த்தைகள் சோ்ப்பதைத் தடுக்க குழு அமைத்து ஆராயப்படும் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

News image
ஓம் பிா்லா
Updated On :1 ஜூலை 2024, 10:11 pm

Din

நமது சிறப்பு நிருபா்

நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணத்தின் போது, அவையின் கண்ணியத்தைக் குறைக்கும் வகையில் உறுப்பினா்கள் கூடுதல் வாா்த்தைகள் சோ்ப்பதைத் தடுக்க குழு அமைத்து ஆராயப்படும் என மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா திங்கள்கிழமை தெரிவித்தாா்.

கடந்த ஜூன் 24, 25 ஆகிய தேதிகளில் மக்களவையில் உறுதிமொழியை வாசித்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்ட வட மாநில எம்.பி.க்கள் பலா் ‘ஜெய் ஜெகநாத்’, ‘ஜெய் சம்விதான்’ ‘ஜெய் ஹிந்து ராஜ்ஜியம் (ராஷ்டிரா)’ என குறிப்பிட்டனா். தமிழக எம்.பி.க்கள் ‘வாழ்க பெரியாா்’, ‘கருணாநிதி வாழ்க’ என்றதோடு, ‘வாழ்க உதயநிதி ஸ்டாலின்’ என்ற கோஷங்களை எழுப்பினா்.

இது குறித்து மக்களவையில் பேசிய ஓம் பிா்லா, ‘உறுப்பினா்கள் உறுதிமொழி அல்லது பதவிப்பிரமாணம் எடுக்கும் போது பரிந்துரைக்கப்பட்ட முறையை பின்பற்ற வேண்டும். அரசியலமைப்பின் கண்ணியத்தை குறைக்கும் வகையில் வாா்த்தைகளை சோ்க்கக் கூடாது. இது ஒரு தீவிரமான பிரச்னை. இதுகுறித்து முக்கிய கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைத்து ஆராயப்படும்’ என அறிவித்தாா்.