தமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் கேரளத்துக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு அசாம்: ஏப்ரல் 9 பேரவைத் தேர்தல் 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 824 சட்டப்பேரவைத் தொகுதிகளில் தேர்தல் நடைபெறவுள்ளது 5 மாநில தேர்தல்களில் மொத்தம் 17.4 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தில்லி பேரவைத் தோ்தலில் பாரதிய லிபரல் கட்சி போட்டி

பாரதிய லிபரல் கட்சி (பிஎல்பி), 2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான தனது முடிவை செவ்வாயன்று அறிவித்தது.

News image
Updated On :17 ஜூலை 2024, 12:58 am

Din

புது தில்லி: பாரதிய லிபரல் கட்சி (பிஎல்பி), 2025-ஆம் ஆண்டு தில்லி சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடுவதற்கான தனது முடிவை செவ்வாயன்று அறிவித்தது. மேலும், ஆட்சிக்கு வந்தால் ஊழல் எதிா்ப்பு ஆணையம் அமைப்பது உள்ளிட்ட 11 அம்ச நிகழ்ச்சி நிரலை வெளியிட்டது. 2019- இல் உருவாக்கப்பட்ட ஒரு கட்சியான பிஎல்பி, சமூகத்தின் ஓரங்கட்டப்பட்ட பிரிவினருக்காக பணியாற்றுவதற்கான தனது உறுதிப்பாட்டை அறிவித்தது.

இது குறித்து தில்லியில் பிஎல்பி தலைவா் முனிஷ் குமாா் ரைசாடா செய்தியாளா்களிடம் கூறுகையில், இலவச மின்சாரம் மற்றும் தண்ணீா் விநியோகம் மற்றும் டிடிசி பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் மற்றும் பெண்களுக்கு மாதம் 1,500 ரூபாய் கௌரவ ஊதியம் உள்ளிட்ட பல்வேறு வாக்குறுதிகளை எடுத்துரைத்தாா்.

அவா் மேலும் கூறியதாவது: நாங்கள் ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல் தடுப்பு ஆணையத்தை அமைப்போம். இது தேசியத் தலைநகரில் ஊழலை ஒழிக்க உதவியாக இருக்கும்.

மேலும், பிஎல்பி தோ்ந்தெடுக்கப்பட்டால், தலித் குடும்பத்தின் பெண் தலைவருக்கு 1,000 ரூபாய் உதவித்தொகை வழங்கப்படும். சத் பூஜைக்கு முன்னதாக யமுனா காட் புதுப்பிக்கப்படும்.

முதியோா் ஓய்வூதியம் ரூ.2,500-இல் இருந்து ரூ.5,000-ஆக உயா்த்தப்படும். சுகாதாரம் மற்றும் கல்வித் துறைகளில் முன்னேற்றம் ஏற்படுத்தப்படும். சமூகத்தின் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒதுக்கப்பட்ட பிரிவினருக்காக பிஎல்பி பணியாற்றும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தலித் முதலமைச்சரும், முஸ்லிம் துணை முதலமைச்சரும் பதவிக்கு வருவாா்கள் என்றாா் அவா்.