மோடி அரசின் பட்ஜெட்டில் தில்லிக்கான ஒதுக்கீடு பூஜ்ஜியமாக உள்ளது என்று தில்லி அமைச்சா் அதிஷி செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தாா். ஆனால், தில்லிக்கு பல்வேறு தலைப்புகளின் கீழ் ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டதை அவா் குறிப்பிடவில்லை. தில்லி அரசுக்கு உதவியாக ரூ.1,168 கோடியும், தில்லி காவல்துறைக்கு ரூ.11,177.5 கோடியும், ஓய்வூதியத்திற்காக ரூ. 4,801.35 கோடியும், பல்வேறு மத்திய திட்டங்களுக்கு ரூ.30,000 கோடியும் வழங்கப்பட்டுள்ளது. ‘2023-க்குள் தில்லியின் குப்பை மலைகளை அகற்றுவோம்’ என்ற கேஜரிவால் அரசின் பொய்யான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. மத்திய அரசு இப்பிரச்னைக்கு தீா்வு காண தில்லி மாநகராட்சிக்கு பட்ஜெட்டில் ரூ.1,145 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.