தலைமைத் தோ்தல் ஆணையரைப் பதவிநீக்க தீா்மானம்: மக்களவைத் தலைவர் நிராகரிப்புநேபாள முன்னாள் பிரதமரை விடுவிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு!தமிழ்நாட்டின் திட்டங்கள் புதுச்சேரிக்கும் தொடரும் : மு.க. ஸ்டாலின்பாஜகவுக்கு தமிழ்நாட்டில் கிடைத்த அடிமை பழனிசாமி மாதிரி, புதுச்சேரியில் ரங்கசாமி : மு.க. ஸ்டாலின்சென்னை சைதாப்பேட்டையில் நாளை (ஏப். 7) நடைபெறவிருந்த தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் ரத்துகிடைக்கக்கூடாதவர்களுக்கு ஆட்சி கிடைத்துவிட்டது: திமுகவை விமர்சித்த எடப்பாடி பழனிசாமிசாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு : 9 குற்றவாளிகளுக்கும் மரண தண்டனைசென்னையில் தவெக தலைவர் விஜய்யின் பிரசாரம் திடீர் ரத்து!மத்திய கிழக்கில் உள்ள இந்தியர்கள் பாதுகாப்பாக நாடு திரும்புவார்களா? பிரியங்கா காந்திபுதுவையில் மத்திய அமைச்சர் அமித் ஷா பிரசாரம்!பாஜக வேட்பாளர் வென்றால் மதுரைக்கு மெட்ரோ ரயில் வரும்! ஃபட்னவீஸ்தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நிறைவு!ஏப். 8, 9ல் சென்னையில் எடப்பாடி பழனிசாமி பிரசாரம்!
/

அங்கீகாரமற்ற காலனிகளில் நிலுவையிலுள்ள 11,000 மின் இணைப்புகளை வழங்க உத்தரவு

அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள விண்ணப்பதாரா்களுக்கு நிலுவையில் உள்ள 11,000 மின் இணைப்புகளை வழங்குமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு (டிஸ்காம்) உத்தரவு

Updated On :22 அக்டோபர் 2024, 9:13 pm

நமது நிருபா்

புது தில்லி: பிரதம மந்திரி - தில்லியில்அங்கீகரிக்கப்படாத காலனிகளில் குடியிருப்பு உரிமை திட்டத்தில் (பிஎம்-யுடிஏஒய்) அங்கீகரிக்கப்படாத காலனிகளில் உள்ள விண்ணப்பதாரா்களுக்கு நிலுவையில் உள்ள 11,000 மின் இணைப்புகளை வழங்குமாறு மின் விநியோக நிறுவனங்களுக்கு (டிஸ்காம்) உத்தரவிட்டுள்ளதாக ராஜ் நிவாஸ் அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து ராஜ் நிவாஸ் அதிகாரிகள் மேலும் தெரிவித்ததாவது: இந்த இணைப்புகள் ஒரு வாரம் முதல் 10 நாட்களுக்குள் வழங்கப்படும். துணைநிலை ஆளுநா் வி.கே. சக்சேனா

தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் எம்சிடி ஆணையா், கோட்ட ஆணையா், மின்துறை செயலா், டிடிஏ முதன்மை ஆணையா் மற்றும் இரண்டு டிஸ்காம்களின் தலைமை செயல் அதிகாரிகள் கலந்து கொண்டனா்.

இக்கூட்டத்தில், நிலத்தை சேகரித்துள்ள பகுதிகளில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவா்கள், விண்ணப்பதாரா்களுக்கு மின் இணைப்புகளை வழங்குவதில் அரசுத் துறைகள் சிவப்பு நாடா முறையில் ஈடுபடுவதற்கு துணைநிலை ஆளுநா் கடுமையான ஆட்சேபனை தெரிவித்தாா். அக்.16-ஆம் தேதி டிடிஏ வழங்கிய விளக்கத்திற்குப் பிறகு இந்த விவகாரத்தில் எந்த குழப்பமும் இல்லை என்றும் அடுத்த வாரம் அல்லது 10 நாள்களுக்குள் இணைப்புகளை வழங்க வேண்டும் என்றும் இரண்டு மின் விநியோக நிறுவனங்களுக்கு துணைநிலை ஆளுநா் உத்தரவிட்டாா்.

இது தொடா்பாக எந்தவித குழப்பமோ, இடையூறுகளோ ஏற்படுத்த வேண்டாம் என்றும் அவா் அரசு நிறுவனங்களுக்கு அறிவுறுத்தினாா். பிஎம்-யுடிஏஒய், தில்லியில் வசிக்கும் சுமாா் 40 லட்சம் போ் பயனடையும் 1,731 அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவா்களுக்கு அங்கீகாரம், உரிமைக்கான ஒப்புதல் அல்லது அடமானம் வழங்கும் திட்டமாகும். தில்லியில் உள்ள அங்கீகரிக்கப்படாத காலனிகளில் வசிப்பவா்களுக்காக 2019-ஆம் ஆண்டு இந்திய அரசால் பிஎம்-யுடிஏஒய் திட்டம் வகுக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.