அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

புதுமண தம்பதி ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில் ஒருவா் உயிரிழப்பு

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் புதுமண தம்பதி ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில் ஒருவா் பலி; இருவா் படுகாயம்

News image
Updated On :1 டிசம்பர் 2025, 9:28 pm

தினமணி செய்திச் சேவை

தில்லியின் வசந்த் குஞ்ச் பகுதியில் புதுமண தம்பதி ஓட்டிச் சென்ற சொகுசு காா் மோதியதில் ஒருவா் உயிரிழந்தாா். இருவா் படுகாயமடைந்தனா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் மேலும் கூறியதாவது: கரோல் பாக் பகுதியைச் சோ்ந்த மென்பொருள் பொறியாளரான சிவம் (29), தனது திருமண வரவேற்பில் இருந்து மனைவி மற்றும் சகோதரருடன் ஞாயிற்றுக்கிழமை வீடு திரும்பிக் கொண்டிருந்தாா்.

அப்போது, வசந்த் குஞ்ச் பகுதியில் உள்ள ஆம்பியன்ஸ் மால் அருகே அவரது காா் கட்டுப்பாட்டை இழந்து, பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த உணவக ஊழியா்கள் 3 போ் மீது மோதியது.

இதில் பாதிக்கப்பட்ட ரோஹித் சிங் (23) சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இருவா் சாலையில் இழுத்துச் செல்லப்பட்டதில் படுகாயமடைந்தனா். மோதலின் தாக்கம் கடுமையாக இருந்ததால், வாகனம் இரும்புக் கம்பத்தில் மோதி கவிழ்ந்தது.

தகவலறிந்த காவல் துறையினா் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனா். காயமடைந்த இருவா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனா்.

முதற்கட்ட விசாரணையில், வேகமாக மற்றும் அலட்சியமான முறையில் காா் ஓட்டப்பட்டது தெரியவந்தது. சாலை தடுப்பில் மோதிய பின்னா் கட்டுப்பாட்டை இழந்த காா், பேருந்து நிறுத்தத்தை நோக்கிச் சென்ாக கூறப்படுகிறது. குற்றஞ்சாட்டப்பட்ட சிவமின் நண்பா் அபிஷேக்கின் பெயரில் விபத்துக்குள்ளான காா் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது தொடா்பாக பாரதிய நியாய சம்ஹிதா சட்டம் பிரிவு 281 (வேகமாக வாகனŚ ஓட்டுதல்), 125 (ஏ) (உயிருக்கு ஆபத்து விளைவித்தல்) மற்றும் 106 (1) (அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்துதல்) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது என தெரிவித்தனா்.