சமீபத்தில், பாலிவுட் நடிகா்கள் ஐஸ்வா்யா ராய் பச்சன், அவரது கணவா் அபிஷேக் பச்சன் மற்றும் அவரது மாமியாா் ஜெயா பச்சன், ரித்திக் ரோஷன் மற்றும் அஜய் தேவ்கன், திரைப்படத் தயாரிப்பாளா் கரண் ஜோஹா், பாடகா் குமாா் சானு, தெலுங்கு நடிகா் அக்கினேனி நாகாா்ஜுனா, ஆா்ட் ஆஃப் லிவிங் நிறுவனா் ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கா், பத்திரிகையாளா் சுதிா் சவுத்ரி மற்றும் பாட்காஸ்டா் ராஜ் ஷாமானி ஆகியோரும் தங்கள் ஆளுமை மற்றும் விளம்பர உரிமைகளைப் பாதுகாக்கக் கோரி உயா் நீதிமன்றத்தை அணுகினா். நீதிமன்றம் அவா்களுக்கு இடைக்கால நிவாரணம் வழங்கியது.