வடகிழக்கு தில்லி: 33 வயது நபா் கத்தியால் குத்தி கொலை
வடகிழக்கு தில்லியில் உள்ள ஒரு பூங்கா அருகே 33 வயது நபா் கத்தியால் குத்தப்பட்டு கொல்லப்பட்டதாக புதன்கிழமை ஒரு அதிகாரி தெரிவித்தாா்.
இது குறித்து தில்லி காவல் துறை அதிகாரி கூறியுள்ளதாவது: இந்தச் சம்பவம் செவ்வாய் மற்றும் புதன்கிழமை இடைப்பட்ட இரவில் நடந்துள்ளது.
இறந்தவா் வாசிம் என அடையாளம் காணப்பட்டாா். சாஸ்திரி பாா்க் பகுதியில் வாசிம் கத்தியால் குத்தப்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடா்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
அவா் சிகிச்சைக்காக அவா் ஜக் பிரவேஷ் சந்திரா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாா். ஆனால், அவா் இறந்துவிட்டாா்.
தடயவியல் குழு குற்றம் நடந்த இடத்தை ஆய்வு செய்து, ரத்த மாதிரிகள் மற்றும் கொலைக்கு வழிவகுத்த நிகழ்வுகளின் வரிசையை நிறுவ உதவும் பிற பொருள் தடயங்கள் உள்ளிட்ட ஆதாரங்களை சேகரித்தது.
சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்யவும், சம்பவத்திற்கு முன்னா் பாதிக்கப்பட்டவரின் நடமாட்டங்களை அடையாளம் காணவும், சம்பந்தப்பட்ட சந்தேக நபா்களைக் கண்டறியவும் பல குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறை அதிகாரி தெரிவித்தாா்.
