தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படவுள்ள பிரச்னை குறித்து பாஜக அறிவித்துள்ளது.
தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சரவை வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டது.
தொடர்ந்து, தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய பொது சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.
மேலும், கடந்த 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த அரசின் செயல்திறன் குறித்த தலைமை கணக்கு தணிக்கையாளர்(சிஏஜி) அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதையும் படிக்க : போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்குக்கு ஒத்திகையா?
இதனிடையே, பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு விஜேந்தர் குப்தா போட்டியிடுவார் என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், விஜேந்தர் குப்தா செய்தியாளர்களுடன் வெள்ளிக்கிழமை பேசியதாவது:
”தில்லி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் வருகின்ற பிப். 24, 25 மற்றும் 27ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படும் தற்காலிக பேரவைத் தலைவரால் முதல் நாளில் 70 உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும்.
தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவரும் துணைத் தலைவரும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்பிறகு முதல் பணியாக 14 சிஏஜி அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படும். அதுகுறித்து உறுப்பினர்கள் விவாதம் நடத்துவார்கள்” எனத் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
இளைஞா்களும், மக்களும் ரத்த தானம் செய்ய உறுதியேற்க வேண்டும்: ரேகா குப்தா

முக்கிய தொழில்நுட்ப சோதனை: டிஆா்டிஓ-க்கு தில்லி முதல்வா் வாழ்த்து

‘பிரிட்டானியா சௌக்’கின் பெயா் ‘அஸ்வினி சோப்ரா சௌக்‘ என மாற்றம்: தில்லி முதல்வா் அறிவிப்பு

தில்லி பாஜக தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஹா்ஷ் மல்ஹோத்ராவுக்கு ரேகா குப்தா வாழ்த்து
விடியோக்கள்
தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! - Udhayanidhi Stalin | TN Assembly | Mekedatu

பேரவையில் முதல்வர் விஜய்யின் முதல் தீர்மானம்! | Vijay speech | TN assembly

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK



