தில்லியில் மிக மோசமாக ஒழுங்கமைக்கப்பட்ட ஏஐ மாநாடு! ஆந்த்ரோபிக் சிஇஓ விமர்சனம்!டெலிகிராம் தடைக்கு எதிரான மனு உயர்நீதிமன்றத்தில் தள்ளுபடி!தவெக நம்பிக்கை வாக்கெடுப்பு வழக்கு: உச்ச நீதிமன்றம் தள்ளுபடிமேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றம்! மேக்கேதாட்டு அணை! தமிழ்நாடு அரசுக்கு திமுக உறுதுணையாக இருக்கும்! உதயநிதி ஸ்டாலின்மேக்கேதாட்டு அணைக்கு எதிரான தீர்மானம்! தேமுதிக, பாமக ஆதரவு!மேக்கேதாட்டு அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசுக்கு கண்டனம்! அமைச்சர் ராஜேஷ்
/

தில்லி சட்டப்பேரவையில் முதல் விவாதம் இதுதான்! பாஜக அறிவிப்பு

தில்லி சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் பிப். 24 கூடுகிறது.

News image

முதல்வர் ரேகா குப்தா - ANI

Updated On :21 பிப்ரவரி 2025, 12:09 pm IST

தில்லி சட்டப்பேரவை கூட்டத்தில் முதலில் விவாதிக்கப்படவுள்ள பிரச்னை குறித்து பாஜக அறிவித்துள்ளது.

தில்லி சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது. முதல்வர் ரேகா குப்தா தலைமையிலான அமைச்சரவை வியாழக்கிழமை பதவியேற்றுக் கொண்டது.

தொடர்ந்து, தில்லி அமைச்சரவைக் கூட்டத்தில் தேசிய பொது சுகாதார காப்பீட்டுத் திட்டத்தை உடனடியாக அமல்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டது.

மேலும், கடந்த 14 ஆண்டுகளாக தாக்கல் செய்யப்படாமல் இருந்த அரசின் செயல்திறன் குறித்த தலைமை கணக்கு தணிக்கையாளர்(சிஏஜி) அறிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதனிடையே, பாஜக சார்பில் சட்டப்பேரவைத் தலைவர் பதவிக்கு விஜேந்தர் குப்தா போட்டியிடுவார் என்று கட்சி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், விஜேந்தர் குப்தா செய்தியாளர்களுடன் வெள்ளிக்கிழமை பேசியதாவது:

”தில்லி சட்டப்பேரவை சிறப்பு கூட்டம் வருகின்ற பிப். 24, 25 மற்றும் 27ஆம் தேதிகளில் நடைபெறவுள்ளது. துணைநிலை ஆளுநரால் நியமிக்கப்படும் தற்காலிக பேரவைத் தலைவரால் முதல் நாளில் 70 உறுப்பினர்களுக்கு பதவிப் பிரமாணம் செய்து வைக்கப்படும்.

தொடர்ந்து, சட்டப்பேரவைத் தலைவரும் துணைத் தலைவரும் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். அதன்பிறகு முதல் பணியாக 14 சிஏஜி அறிக்கைகளும் தாக்கல் செய்யப்படும். அதுகுறித்து உறுப்பினர்கள் விவாதம் நடத்துவார்கள்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.