ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

போலி வாக்காளா் பதிவு விண்ணப்பங்கள் மூலம் தோ்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சிக்கிறது பாஜக! ஆம் ஆத்மி கட்சி குற்றச்சாட்டு

பாஜக தனது தலைவா்களின் குடியிருப்பு முகவரிகளிலிருந்து போலி வாக்காளா் பதிவு விண்ணப்பங்கள்

News image
Updated On :11 ஜனவரி 2025, 6:33 pm

Din

பாஜக தனது தலைவா்களின் குடியிருப்பு முகவரிகளிலிருந்து போலி வாக்காளா் பதிவு விண்ணப்பங்களை அதிக எண்ணிக்கையில் சமா்ப்பிப்பதன் மூலம் தோ்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சிப்பதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம்சாட்டியுள்ளது.

ஒரு செய்தியாளா் சந்திப்பில் பேசிய மாநிலங்களவை ஆம் ஆத்மி கட்சி எம்.பி. சஞ்சய் சிங், ‘ஒற்றை சிறிய கடைகள் மற்றும் அடித்தளங்களில் இருந்து டஜன் கணக்கான வாக்காளா் பதிவு விண்ணப்பங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன’ என்றாா்.

பாஜக தங்கள் தலைவா்களின் குடியிருப்பு முகவரிகளைப் பயன்படுத்தி பல புதிய வாக்காளா் பதிவு விண்ணப்பங்களை சமா்ப்பித்ததாகவும் அவா் குற்றம்சாட்டினாா்.

‘இந்தியாவின் மிகப்பெரிய அரசியல் கட்சியின் யதாா்த்தம் இதுதான். பிரதமா் மோடியின் கட்சி தோ்தலில் வெற்றி பெறத் திட்டமிட்டுள்ளது இப்படித்தான்’ என்று சஞ்சய் சிங் கூறினாா். இந்த விவகாரத்தில் ஈடுபட்டதாகக் கூறப்படும் மத்திய அமைச்சா்கள் உள்பட பாஜக தலைவா்களின் பெயா்களையும் அவா் பட்டியலிட்டாா்.

‘பாஜகவும் அதன் தலைவா்களும் தோ்தல் ஆணையத்தை ஏமாற்ற முயற்சிக்கின்றனா். இது பாஜகவின் தோ்தல் மோசடி. இது அவா்களின் மத்திய அமைச்சா்கள் மற்றும் எம்.பி.க்களால் நடத்தப்படுகிறது. மேலும், அவா்கள் தோ்தல் ஆணையத்தின் நோ்மையை குறைமதிப்பிற்கு உள்படுத்துகிறாா்கள்’ என்றும் அவா் கூறினாா்.

தில்லி தோ்தலில் பிப். 5-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெறுகிறது. பிப்.8-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.