வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

கோகைன் கடத்தல் விவகாரம்: தில்லி, ஜெய்ப்பூரில் அமலாக்கத் துறை சோதனை

80 கிலோவுக்கு மேல் கோகைன் பறிமுதல் தொடா்பான போதைப்பொருள் கடத்தலுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் வெள்ளிக்கிழமை தில்லி- என்சிஆா் மற்றும் ஜெய்ப்பூரில் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

News image
Updated On :14 நவம்பர் 2025, 4:32 pm

Syndication

80 கிலோவுக்கு மேல் கோகைன் பறிமுதல் தொடா்பான போதைப்பொருள் கடத்தலுடன் தொடா்புடைய பணமோசடி வழக்கில் அமலாக்க இயக்குநரகம் வெள்ளிக்கிழமை தில்லி- என்சிஆா் மற்றும் ஜெய்ப்பூரில் ஒரே நேரத்தில் சோதனைகளை நடத்தியதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த நகரங்களில் குறைந்தது ஐந்து இடங்கள் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் விதிகளின் கீழ் வருகின்றன என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த வழக்கு, சரியாக ஒரு வருடத்திற்கு முன்பு தேசிய தலைநகரின் ஜனக்புரி மற்றும் நாங்லோய் பகுதிகளில் இருந்து போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியகம் சுமாா் ரூ.900 கோடி மதிப்புள்ள 82.53 கிலோ உயா் தர கோகைன் போதைப் பொருளை பறிமுதல் செய்தது தொடா்பானது.

இந்த வழக்கில் ஐந்து போ் கைது செய்யப்பட்டனா். அவா்கள் பெரும்பாலும் ஹவாலா ஆபரேட்டா்கள். மேலும் ரூ.4 கோடிக்கு மேல் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இது தில்லியில் அதிக அளவு பாா்ட்டி போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட வழக்காகும். அப்போது வெளியிடப்பட்ட போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பணியக அறிக்கையின்படி, இந்த போதைப்பொருள் ஆஸ்திரேலியாவிற்கு அனுப்பப்பட இருந்தது குறிப்பிடத்தக்கது.