6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய காவல் உதவி ஆய்வாளர் கைது

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற தில்லி காவல் துறை உதவி ஆய்வாளர் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

News image
கோப்புப் படம்
Updated On :24 செப்டம்பர் 2025, 9:57 pm

தினமணி செய்திச் சேவை

வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்ட நபரிடம் ரூ.2 லட்சம் லஞ்சம் பெற்ற தில்லி காவல் துறை உதவி ஆய்வாளர் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனர்.

கைதான உதவி ஆய்வாளர் கரம்வீர் சிங், துவாரகாவில் உள்ள தில்லி காவல் துறை சிறப்பு பிரிவின் உளவு பிரிவில் கடந்த 2019 முதல் பணியாற்றி வருகிறார். பாரதிய நியாய சம்ஹிதா சட்டத்தின் பிரிவு 35(3)-இன் பதிவுசெய்யப்பட்ட வழக்கு தொடர்பான விசாரணைக்காக விஷ்ணு பிஷ்னோய் என்பவரது வங்கி கணக்கு மற்றும் பிற கணக்குகள் முடக்கப்பட்டன.இந்நிலையில், அவற்றை விடுவிக்க ரூ.5 லட்சம் லஞ்சம் விஷ்ணுவிடம் தருமாறு உதவி ஆய்வாளர் சிங் கேட்டுள்ளார்.

இது தொடர்பாக தனது வழக்குரைஞருடன் காவல் துறையை அணுகிய விஷ்ணு, உதவி ஆய்வாளருக்கு எதிராகப் புகாரளித்தார்.

முதல்கட்டமாக ரூ.2 லட்சத்துடன் வந்து துவாரகா செக்டார்-14 மெட்ரோ நிலையத்தில் தன்னை செவ்வாய்க்கிழமை சந்திக்குமாறு விஷ்ணுவிடம் சிங் தெரிவித்துள்ளார். தனது சொந்தக் காரில் அங்கு வந்த சிங், விஷ்ணுவை காருக்குள் ஏறுமாறு தெரிவித்தார். லஞ்சத்தை பெற்றுக் கொண்ட பிறகு விஷ்ணுவை காரிலிருந்து இறக்கிவிட்ட சிங், பின்னர் அங்கிருந்து சென்றார். அவருடைய வாகனத்தை லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் 2 கி.மீ. தூரத்துக்கு பின்தொடர்ந்து சென்று, வாகனத்தை இடைமறித்தனர். அப்போது, வாகனத்தை நிறுத்திய சிங், அங்கிருந்து தப்பிக்க முயன்றார். அவரைப் போலீஸார் மடக்கிப் பிடித்தனர். அவருடைய காரிலிருந்து ரூ.2 லட்சம் லஞ்சம் கைப்பற்றப்பட்டது.

இந்தச் சம்பவம் லஞ்ச ஒழிப்பு பிரிவு காவல் நிலையத்தில் ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.