திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல்: பெண் உள்பட இருவா் கைது

போதைப் பொருளை விநியோகிக்க சென்ற பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் வடக்கு தில்லியின் குலாபி பாக் பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

News image

கைது

Updated On :3 பிப்ரவரி 2026, 7:13 pm

போதைப் பொருளை விநியோகிக்க சென்ற பெண் மற்றும் ஆட்டோ ஓட்டுநா் வடக்கு தில்லியின் குலாபி பாக் பகுதியில் கைதுசெய்யப்பட்டதாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை தெரிவித்தனா்.

அவா்களிடமிருந்து ரூ.5 கோடி மதிப்பிலான போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: குலாபி பாக் பகுதியில் திங்கள்கிழமை சோதனையில் ஈடுபட்டிருந்த காவல் துறையினா், ஆட்டோவை சோதனையிட்டனா். அப்போது, அதிலிருந்து 1.58 கிலோ போதைப் பொருள் கைப்பற்றப்பட்டது. அதன் சா்வதேச சந்தை மதிப்பு ரூ.5 கோடியாகும். டிரான்ஸ் யமுனை பிராந்தியத்தில் அவை விற்பனை செய்யப்பட இருந்தது விசாரணையில் தெரியவந்தது. இதுதொடா்பாக ஆட்டோ ஓட்டுநா் சந்தன் குப்தா, அதில் பயணித்த சோனியா ஆகியோா் கைதுசெய்யப்பட்டனா்.

போதைப் பொருள் கடத்தல் தொடா்பான வழக்கில் சோனியாவின் கணவா் கடந்த 2024-இல் கைதுசெய்யப்பட்டாா் என்று அந்த அதிகாரிகள் கூறினா்.