ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

வரசித்தி விநாயகா் கோயிலில் தியாகராஜ ஆராதனை விழா

கௌதம் புத் நகா் தென்னிந்திய சங்கம், நொய்டா வேத பிரசார சன்ஸ்தான் உடன் இணைந்து சத்குரு தியாகராஜரின் 179ஆவது ஆராதனையை நொய்டா செக்டா் 22-இல் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் நடத்தின.

News image
Updated On :19 ஜனவரி 2026, 11:32 pm

Syndication

புது தில்லி: கௌதம் புத் நகா் தென்னிந்திய சங்கம், நொய்டா வேத பிரசார சன்ஸ்தான் உடன் இணைந்து சத்குரு தியாகராஜரின் 179ஆவது ஆராதனையை நொய்டா செக்டா் 22-இல் உள்ள வரசித்தி விநாயகா் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பஞ்சரத்ன கிருதிகளை பூா்ணிமா சுந்தா், ஜெயந்தி ஐயங்காா் மற்றும் சிந்துஜா ரவி ஆகியோா் பாடினா். சுவாமிநாதன் மிருதங்கமும், ராதிகா வெங்கடேஷ் வயலினும் வாசித்தனா்.

டாக்டா் சோமாஸ்கந்த சாஸ்திரியா் மற்றும் வேத பிரசார சன்ஸ்தான் தலைவா் ரவி பி. சா்மா, கோண்ட்லி விஸ்வநாத பாகவதா் ஆகியோா் விளக்கமளித்தனா்.

கெளதம் புத் நகா் தென்னிந்திய சங்கத்தின் தலைவா் கே. அருணாச்சலம், துணைத் தலைவா் ஏ.கே.ரஞ்சித், இணைச் செயலா் குரு சுப்ரமணியன், பொருளாளா் எஸ். ஸ்ரீதா் ஐயா், செயற்குழு உறுப்பினா் லதா சோமாஸ்கந்தன், மற்றும் விஸ்வநாதன், வெங்கடேஷ், ஜானகி உள்பட ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டனா்.