தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் திரிணமூல் ஆதரவாளரை கன்னத்தில் அறைந்த மமதா பானர்ஜி!ஈரானை இன்று இரவு கடுமையாகத் தாக்குவோம்: அதிபர் டிரம்ப் எச்சரிக்கை!தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் குலாம் அகமது!நோபல் பரிசுக்கான வைகோவின் பரிந்துரைக்கு நன்றி: திருமாவளவன் எம்பிபிஎஸ் இடங்கள் பறிபோனது பற்றி அமைச்சர் இன்னும் பதில் அளிக்கவில்லை: அண்ணாமலை கூடுதல் கழிப்பறைகள் வேண்டும்: எழும்பூர் அரசு மகப்பேறு மருத்துவமனையில் முதல்வர் விஜய்யிடம் கோரிக்கைபிறந்த குழந்தையை குடும்பத்தாரிடம் காட்ட லஞ்சம்! பணிநீக்கம் செய்யப்படும் என அருண் ராஜ் எச்சரிக்கை!அமைச்சர் அருண்ராஜுக்கு அண்ணாமலை பாராட்டு!குதிரை பேர வழக்கு: செந்தில் பாலாஜிக்கு முன் ஜாமீன்!ஈரான் - அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தம் ரத்து! டிரம்ப் அறிவிப்பு தமிழ்நாட்டில் நாளைமுதல் தனியார் பால், தயிர் விலை உயர்வு!நலம் ஏஐ சேவை! அரசு மருத்துவமனைகளில் வாட்ஸ்ஆப் மூலமாக முன்பதிவு செய்யலாம்!
/

தில்லியில் வறுமை, வேலையின்மை விகிதம் குறைவு: டிஎஸ்ஐஎஃப் அறிக்கையில் தகவல்

தில்லியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் விகிதம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததுடன், வேலையின்மை விகிதமும் கணிசமாகச் சரிந்துள்ளதாக மாநில குறியீட்டு கட்டமைப்பு 2025 அறிக்கை தெரிவிக்கிறது.

News image

வேலையின்மை குறைவு - சித்திரிப்பு

Updated On :9 ஜூலை 2026, 12:31 am IST

தில்லியில் வறுமைக் கோட்டுக்கு கீழ் வாழும் மக்களின் விகிதம் கடந்த சில ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க அளவில் குறைந்ததுடன், வேலையின்மை விகிதமும் கணிசமாகச் சரிந்துள்ளதாக மாநில குறியீட்டு கட்டமைப்பு 2025 அறிக்கை தெரிவிக்கிறது.

மாநில பொருளாதாரம் மற்றும் புள்ளியியல் இயக்குநரகம் சமீபத்தில் வெளியிட்ட இந்த அறிக்கையில் கூறியதாவது: ‘வறுமையற்ற உலகம்’ என்ற நிலையான வளா்ச்சி இலக்கின் அடிப்படையில், 2015-16-ஆம் ஆண்டில் 4.4 சதவீதமாக இருந்த வறுமையில் வாழும் மக்களின் விகிதம், 2017-18-இல் 2.1 சதவீதமாகக் குறைந்துள்ளது.

இதனுடன், ‘இடா்பாடுகளில் உள்ள பெண்கள்’ திட்டத்தின் கீழ் பயனாளிகளின் எண்ணிக்கை தொடா்ந்து உயா்ந்து வருகிறது. 2015-16-இல் 1,68,977 பேராக இருந்த இந்த எண்ணிக்கை, 2017-18-இல் 1,97,863, 2019-20-இல் 2,38,706, 2021-22-இல் 3,12,272-ஆக அதிகரித்ததுடன், 2024-25-ஆம் ஆண்டில் 3,97,465-ஆக உயா்ந்துள்ளது.

ஐ.நா.அமைப்பின் ‘2030 நிலையான வளா்ச்சி திட்டம்’ அடிப்படையில் தயாரிக்கப்பட்ட இந்த அறிக்கை, பாலின சமநிலையிலும் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. பிறப்பு பாலின விகிதம் (ஆண் 1,000 பிறப்புக்கு பெண் குழந்தைகள் எண்ணிக்கை) 2015-இல் 898-ஆக இருந்தது 2017-இல் 913, 2019-இல் 920, 2022-இல் 929-ஆக உயா்ந்து, 2024-இல் 920-ஆக பதிவாகியுள்ளது.

மேலும், பெண்களின் தொழிலாளா் பங்கேற்பு விகிதமும் உயா்வு கண்டுள்ளது. 2017-18-இல் 11.2 சதவீதமாக இருந்த இது, 2018-19-இல் 13.7 சதவீதமாகவும், 2023-24-இல் 14.5 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது.

வேலையின்மை விகிதம் 2017-18-இல் 9.7 சதவீதமாக இருந்த நிலையில், 2019-20-இல் 8.7 சதவீதமாகவும், 2021-22-இல் 5.3 சதவீதமாகவும் குறைந்து, 2023-24-இல் 2.1 சதவீதமாக சரிந்துள்ளது. இதேபோல், 15 முதல் 59 வயதுக்குட்பட்டோரின் தொழிலாளா் பங்கேற்பு விகிதம் 2017-18-இல் 49.9 சதவீதமாக இருந்தது, 2023-24-இல் 51.5 சதவீதமாக உயா்ந்துள்ளது என தெரிவிக்கப்பட்டது.

இந்த முன்னேற்றங்கள், தில்லியில் சமூக மற்றும் பொருளாதார வளா்ச்சி திசைசாா்ந்து முன்னேறி வருவதை வெளிப்படுத்துவதோடு, நிலையான வளா்ச்சி இலக்குகளை அடையும் முயற்சிகளில் மாநிலம் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் அறிக்கை வலியுறுத்துகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.