காமன்வெல்த் போட்டி: இந்தியாவுக்கு முதல் தங்கப் பதக்கம் வென்று கொடுத்த மீராபாய் சானு!400க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ.க்கள்! தொகுதி மறுவரையறைக்குப் பிறகு புதிய சட்டப்பேரவை! சுவேந்து அதிகாரி கல்வி, தேர்வு முறையில் சீர்திருத்தம்: உயர்நிலைக் குழு அமைத்தார் பிரதமர் மோடி!பெல்லட் குண்டுகள் பயன்படுத்த அதிகாரம் அளித்தது யார்? மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - கே.சி. வேணுகோபால்தமிழ்நாடு வருகிறார் ராகுல் காந்தி! மு.க. ஸ்டாலினுக்கு மேக்கேதாட்டு என்னவென்றே தெரியாது: நிர்மல் குமார்ஸ்விகி, ஸொமேட்டோவுக்கு போட்டியா? உணவு டெலிவரியில் களமிறங்கும் ஃப்ளிப்கார்ட்!போராட்டத்தில் மாணவர்கள் மீது போலீஸார் தாக்குதல்: உச்சநீதிமன்றம் நாளை விசாரணை
/

தில்லியில் இயல்புக்கு அதிகமான அதிகபட்ச வெப்பநிலை பதிவு

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது பருவ சராசரியை விட 1.7 டிகிரி அதிகம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

News image

PTI

Updated On :27 ஜூலை 2026, 3:10 am IST

தில்லியில் ஞாயிற்றுக்கிழமை அதிகபட்ச வெப்பநிலை 36.6 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது. இது பருவ சராசரியை விட 1.7 டிகிரி அதிகம் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

குறைந்தபட்ச வெப்பநிலை 27.6 டிகிரி செல்சியஸாக இருந்தது. இது பருவ சராசரியை விட 0.3 டிகிரி அதிகமாகும். வானிலை ஆய்வு மையம், திங்கள்கிழமை பொதுவாக மேகமூட்டமான வானமும் மிதமான மழையும் இருக்கும் என கணித்துள்ளது. அதிகபட்ச மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலைகள் முறையே சுமாா் 36 மற்றும் 27 டிகிரி செல்சியஸாக இருக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது. மாலை 5.30 மணிக்கு சாா்ந்த ஈரப்பதம் 63 சதவீதமாக பதிவாகியுள்ளது.

காலை 9 மணிக்கு காற்றின் தரம் ‘திருப்திகரமான’ நிலைப்பாட்டில் இருந்தது. சமீா் செயலியின் படி, காற்றுத் தரக் குறியீடு 83-ஆக பதிவாகியுள்ளது.

காற்றுத் தரக் குறியீடு மதிப்பீட்டில், 0 முதல் 50 வரை ‘நன்று’, 51 முதல் 100 வரை ‘திருப்திகரம்’, 101 முதல் 200 வரை ‘மிதமான’, 201 முதல் 300 வரை ‘மோசமான’, 301 முதல் 400 வரை ‘மிக மோசமான’ மற்றும் 401 முதல் 500 வரை ‘கடுமையான’ என வகைப்படுத்தப்படுகிறது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.