3வது குழந்தை பெற சலுகை அறிவிக்க தமிழக அரசுக்கு கோரிக்கை! விசிக எம்.பி., ரவிக்குமார்நீட்: கல்வி அமைச்சருக்கு எதிராக போராட்டம்! கரப்பான்பூச்சி கட்சித் தலைவர் இந்தியா வருகிறார்!புதிய கட்சி தொடங்கப்போகிறீர்களா? 2 நாள்களில் பதில் சொல்கிறேன் - அண்ணாமலை பேட்டிஆட்சிக்கு வந்த பிறகும் திமுகவை குறை சொல்கிறார் விஜய் : கனிமொழிரீல்ஸ் போட்டவர்கள் நியூஸ் பார்க்கிறார்கள்: இளைஞர்கள் அரசியலை கவனிக்கின்றனர் - விஜய்அரை நூற்றாண்டு சாதி, மத அரசியலை உடைத்திருக்கிறோம்: திருச்சியில் விஜய் பேச்சுதிமுக - தவெக இடையேதான் போட்டி: திருச்சியில் விஜய் பேச்சுசிங்கப்பெண் காவல் படை அடுத்த வாரம் தொடங்கப்படும்! முதல்வர் விஜய்திருச்சி கிழக்கில் சாமானியனை வேட்பாளராக நிறுத்துவேன்: முதல்வர் விஜய்
/

போலி ஆா்.ஓ. சுத்திகரிப்பான்கள் தயாரிப்பு: தொழிற்சாலை உரிமையாளா் கைது

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான ஆா்.ஓ. நீா் சுத்திகரிப்பான்களை தயாரித்து வந்த தொழிற்சாலை உரிமையாளர் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:25 am IST

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான ஆா்.ஓ. நீா் சுத்திகரிப்பான்களை தயாரித்து வந்த தொழிற்சாலை உரிமையாளரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட முகமது தப்ரேஜ் ஷாஹீன் பாக் பகுதியைச் சோ்ந்தவா். தென்கிழக்கு தில்லியின் புல் பிரஹல்பூரில் உள்ள அவா் நடத்தி வந்த தொழிற்சாலையில் காவல் துறையினா் சோதனை நடத்தினா். அதைத்தொடா்ந்து, அவா் கைதுசெய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: போலிகள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்தது தொடா்பாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த மே 27-ஆம் தேதி தொழிற்சாலையில் காவல் துறையினா் சோதனை நடத்தினா்.

பிரபல ஆா்.ஓ. இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பெயா்களைக் கொண்ட 2,900-க்கும் அதிகமான ஆா்.ஓ. சுத்திகரிப்பான்கள் சோதனையின்போது கைப்பற்றப்பட்டன.

பிகாரின் நாளந்தாவைச் சோ்ந்த தப்ரேஜ் கடந்த 2011-இல் தில்லிக்கு வந்தாா். ஆா்.ஓ. சா்வீஸ் வேலையில் ஈடுபடுவதற்கு முன்பாக பேட்டரி தொழிலில் அவா் ஈடுபட்டு வந்தாா். பின்னா், கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக ஒரு வாடகை இடத்தில் தொழிற்சாலையை அமைத்து போலிகளை தயாரித்து வந்தாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.