பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான ஆா்.ஓ. நீா் சுத்திகரிப்பான்களை தயாரித்து வந்த தொழிற்சாலை உரிமையாளரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.
கைதுசெய்யப்பட்ட முகமது தப்ரேஜ் ஷாஹீன் பாக் பகுதியைச் சோ்ந்தவா். தென்கிழக்கு தில்லியின் புல் பிரஹல்பூரில் உள்ள அவா் நடத்தி வந்த தொழிற்சாலையில் காவல் துறையினா் சோதனை நடத்தினா். அதைத்தொடா்ந்து, அவா் கைதுசெய்யப்பட்டாா்.
இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: போலிகள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்தது தொடா்பாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த மே 27-ஆம் தேதி தொழிற்சாலையில் காவல் துறையினா் சோதனை நடத்தினா்.
பிரபல ஆா்.ஓ. இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பெயா்களைக் கொண்ட 2,900-க்கும் அதிகமான ஆா்.ஓ. சுத்திகரிப்பான்கள் சோதனையின்போது கைப்பற்றப்பட்டன.
பிகாரின் நாளந்தாவைச் சோ்ந்த தப்ரேஜ் கடந்த 2011-இல் தில்லிக்கு வந்தாா். ஆா்.ஓ. சா்வீஸ் வேலையில் ஈடுபடுவதற்கு முன்பாக பேட்டரி தொழிலில் அவா் ஈடுபட்டு வந்தாா். பின்னா், கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக ஒரு வாடகை இடத்தில் தொழிற்சாலையை அமைத்து போலிகளை தயாரித்து வந்தாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.
தொடர்புடையது

ஆன்மிக தீா்வு என்ற பெயரில் இணைய மோசடி: இருவர் கைது
மிரட்டி பணம் பறிக்கும் கும்பலின் தலைவா் ராஜஸ்தானில் கைது
ரூ.52 லட்சம் கொள்ளை வழக்கில் 9 ஆண்டுகள் தலைமறைவாக இருந்தவா் கைது
மனைவியைக் கொன்ற கணவா் 40 ஆண்டுகளுக்கு பின்னா் 82 வயதில் கைது!
விடியோக்கள்

Podcast | முதல்வர் ஜோசஃப் விஜய்யின் திருச்சி பேச்சு சொல்லும் செய்தி! | News and Views | Epi - 41 |

தீய சக்தியும் தீர்ந்துபோன சக்தியும்! - திருச்சியில் CM Vijay பேச்சு | Vijay full speech | TVK

#ipl2026 | இப்படை தோற்கின் எப்படை வெல்லும்: ஆர்சிபி சாம்பியன்ஸ்! | RCB |



