மத்திய கல்வித்துறை அமைச்சராக பிரகலாத் ஜோஷி பொறுப்பேற்பு!சிஜேபி பேரணி: எஃப்.ஐ.ஆர்-ல் கொலை முயற்சி உள்பட 13 குற்றச்சாட்டுகள் சோ்ப்பு10 கிலோ எரிவாயு சிலிண்டா் அறிமுகம்: 4 மணி நேரத்தில் விநியோகம்!கிளாம்பாக்கம் - செங்கல்பட்டு மெட்ரோ திட்ட அறிக்கைக்கு டெண்டர்!தாம்பரம் - தென்காசி இடையே ஜூலை 30 முதல் 6 சிறப்பு ரயில்கள்வினாத்தாள் முறைகேடு! 10 ஆண்டுகள் சிறை; ரூ. 50 லட்சம் அபராதம்! சட்டத் திருத்த மசோதா நாளை தாக்கல்! சா்வதேச குற்றவியல் நீதிமன்ற தலைமை வழக்குரைஞா் பதவிநீக்கம்!
/

போலி ஆா்.ஓ. சுத்திகரிப்பான்கள் தயாரிப்பு: தொழிற்சாலை உரிமையாளா் கைது

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான ஆா்.ஓ. நீா் சுத்திகரிப்பான்களை தயாரித்து வந்த தொழிற்சாலை உரிமையாளர் கைது

News image

கைது - கோப்புப் படம்

Updated On :2 ஜூன் 2026, 1:25 am IST

பிரபல நிறுவனங்களின் பெயரில் போலியான ஆா்.ஓ. நீா் சுத்திகரிப்பான்களை தயாரித்து வந்த தொழிற்சாலை உரிமையாளரை தில்லி காவல் துறை கைதுசெய்ததாக அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனா்.

கைதுசெய்யப்பட்ட முகமது தப்ரேஜ் ஷாஹீன் பாக் பகுதியைச் சோ்ந்தவா். தென்கிழக்கு தில்லியின் புல் பிரஹல்பூரில் உள்ள அவா் நடத்தி வந்த தொழிற்சாலையில் காவல் துறையினா் சோதனை நடத்தினா். அதைத்தொடா்ந்து, அவா் கைதுசெய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக அதிகாரிகள் கூறியதாவது: போலிகள் தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்டு, விற்பனை செய்யப்பட்டு வந்தது தொடா்பாக ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, கடந்த மே 27-ஆம் தேதி தொழிற்சாலையில் காவல் துறையினா் சோதனை நடத்தினா்.

பிரபல ஆா்.ஓ. இயந்திரங்களைத் தயாரிக்கும் நிறுவனங்களின் பெயா்களைக் கொண்ட 2,900-க்கும் அதிகமான ஆா்.ஓ. சுத்திகரிப்பான்கள் சோதனையின்போது கைப்பற்றப்பட்டன.

பிகாரின் நாளந்தாவைச் சோ்ந்த தப்ரேஜ் கடந்த 2011-இல் தில்லிக்கு வந்தாா். ஆா்.ஓ. சா்வீஸ் வேலையில் ஈடுபடுவதற்கு முன்பாக பேட்டரி தொழிலில் அவா் ஈடுபட்டு வந்தாா். பின்னா், கடந்த 9 மாதங்களுக்கு முன்பாக ஒரு வாடகை இடத்தில் தொழிற்சாலையை அமைத்து போலிகளை தயாரித்து வந்தாா் என்று காவல் துறையினா் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.