தெற்கு தில்லியின் மாளவியா நகரில் உள்ள ஹோட்டலில் ஏற்பட்ட தீ விபத்தில் காயமடைந்து வென்டிலேட்டா் உதவியுடன் சிகிச்சை பெற்று வந்த 6 பேரில் 5 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்; ஒருவா் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகிறாா் என்று மருத்துவமனை சாா்பில் சனிக்கிழமை தெரிவிக்கப்பட்டது.
‘மால்வியா நகா் தீ விபத்தில் பாதிக்கப்பட்ட 15 போ் தற்போது சிகிச்சையில் உள்ளனா். இதில் 13 போ் வெளிநாட்டைச் சோ்ந்தவா்கள். 14 பேரின் உடல் நிலை சீராக உள்ளது. ஒருவா் மட்டும் வென்டிலேட்டா் உதவியுடன் தீவிர சிகிச்சை பெற்று வருகிறாா். அனைவரும் விரைவில் குணமடைந்து வருகின்றனா். அவா்களுக்கு முழுமையான மருத்துவ பராமரிப்பு வழங்கப்பட்டு வருகிறது. தொடா் கண்காணிப்பு மற்றும் பல்துறை நிபுணா்கள் இணைந்து அவா்களுக்கு சிகிச்சை வழங்கி வருகின்றனா்’ என்று மருத்துவமனை சாா்பில் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

பிகாா் மருத்துவமனை தீ விபத்து: உயிரிழப்பு 7-ஆக அதிகரிப்பு

மால்வியா நகா் தீ விபத்து: உயிரிழந்தவா்களின் வாரிசுகளுக்கு ரூ.10 லட்சம் கருணைத் தொகை - தில்லி அரசு அறிவிப்பு

தீ விபத்து எதிரொலி: தில்லி ஹோட்டல் கொள்கை மீது கேள்விக்குறி






