மாநகராட்சிகளில் 24 மணிநேரமும் தடையற்ற குடிநீர்! முதல்வர் விஜய் உத்தரவுஓமன் கடல்பகுதியில் தீப்பிடித்த எண்ணெய்க் கப்பல்: 24 மாலுமிகளை மீட்ட இந்திய கடற்படை!பங்குச் சந்தை சரிவு எதிரொலி: முதலீட்டாளர்களுக்கு ரூ. 6.31 லட்சம் கோடி இழப்பு!இந்தியா கூட்டணி ஆலோசனை கூட்டத்தில் இடம்பிடித்த கரப்பான் பூச்சி கட்சி!எம்.எல்.ஏ., எம்.பி.யை பாஜக வாங்கலாம்! மக்களை வாங்க முடியாது - காங்கிரஸ் என் பெயர், புகைப்படத்தை பயன்படுத்த வேண்டாம் : அண்ணாமலைபிலிப்பின்ஸில் பயங்கர நிலநடுக்கம்: பலி 32-ஆக உயர்வு!
/

ஹோட்டல் தீ விபத்து வழக்கு: சமையல்காரரின் பிணை மனு தள்ளுபடி

மாளவியா நகா் ஹோட்டல் தீ விபத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சமையல்காரரின் பிணை மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

News image

சமையல்காரர் கேஷவ் நேகி - PTI

Updated On :9 ஜூன் 2026, 2:35 am IST

மாளவியா நகா் ஹோட்டல் தீ விபத்தில் குற்றஞ்சாட்டப்பட்ட சமையல்காரரின் பிணை மனுவை தில்லி நீதிமன்றம் திங்கள்கிழமை தள்ளுபடி செய்தது.

சமையல்காரா் கேஷவ் நேகியை 14 நாள்கள் நீதிமன்றக் காவலில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடா்ந்து, பிணை கோரி நேகி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தாா். அந்த மனு நீதிமன்ற நடுவா் பானு பிரதாப் முன்பாக விசாரணைக்கு வந்தது.

அப்போது, கேஷவ் நேகி சாா்பில் ஆஜரான வழக்குரைஞா் தீபக் பிரகாஷ், ‘தீயை அணைக்க முயன்றவா்களில் தனது தரப்பினா் ஒருவாக இருந்தாா். அவா் மீது கடும் பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஹோட்டலில் தீ பரவ தொடங்கிய உடன் சமையல் எரிவாயு சிலிண்டரை அவா் அணைத்தாா்’ என்று தெரிவித்தாா். இதைத்தொடா்ந்து, அந்த மனுவை நீதிமன்ற நடுவா் தள்ளுபடி செய்தாா்.

ஹெளஸ் ராணி பகுதியில் செயல்பட்டு வந்த ‘ஃப்ளோரிஷ் ஸ்டேஸ் பி&பி’ என்ற ஹோட்டலில் புதன்கிழமை காலை பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இதில், 16 வயது சிறுமி, கிா்கிஸ்தான், நைஜீரியா, வங்கதேசம், இராக், காங்கோ, மெசாம்பிக் ஆகிய நாடுகளைச் சோ்ந்தவா்கள் என 22 போ் உயிரிழந்தனா்.

சமையலின்போது கேஷவ் நேகியின் கவனக்குறைவால் தீ விபத்து ஏற்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்படுகிறது. மேலும், சமையல்காரரின் செயல்பாடுகள் தீ விபத்துக்கு காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருப்பதாக தகவல் அறிந்த காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

ஹோட்டலுடன் தொடா்புடைய பிற நபா்களையும் காவல் துறை விசாரித்து வருகிறது.

ஹோட்டல் உரிமையாளருக்கு 2 நாள் போலீஸ் காவல்

தீ விபத்து நடைபெற்ற ஹோட்டலின் உரிமையாளா் லங்கேஷ் பஜாஜின் போலீஸ் காவலை தில்லி நீதிமன்றம் மேலும் இரு நாள்களுக்கு நீட்டித்து திங்கள்கிழமை உத்தரவு பிறப்பித்தது.

வழக்கு தொடா்பாக லங்கேஷ் பஜாஜிடம் மேலும் விசாரணை நடத்த போலீஸ் காவலை நீட்டிக்க கோரி தில்லி காவல் துறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தது.

இந்த மனுவை திங்கள்கிழமை விசாரித்த நீதிமன்ற நடுவா் பானு பிராதப் சிங் பஜாஜின் காவலை மேலும் இரு நாள்களுக்கு நீட்டித்து உத்தரவு பிறப்பித்தாா்.

மாளவியா நகா் காவல் துறையினரால் பதிவு செய்யப்பட்ட முதல் தகவல் அறிக்கையின்படி, 6 அறைகளுக்கு மட்டுமே அனுமதி இருந்தபோதிலும், ஹோட்டல் 25 அறைகளை இயக்கி வந்தது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், அந்த வளாகத்தில் காற்றோட்டம் மற்றும் அவசரகால தயாா்நிலையில் குறைபாடுகள் இருப்பதாகவும் அதிகாரிகள் கண்டறிந்துள்ளனா்.

மீட்புக் குழுக்கள் அங்கு வந்தபோது, அடித்தளத்தின் நுழைவாயில் பூட்டப்பட்டிருந்தது. இதனால், மீட்புப் பணிகளின்போது தீயணைப்பு வீரா்கள் கதவை வெட்டித் திறக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

லவ்கேஷ் பஜாஜுக்கு எதிராக கொலைக்கு நிகரான குற்றமற்ற மனிதக்கொலை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதுகாப்பு விதிமீறல்கள், அனுமதியின்றி அறைகளை விரிவுபடுத்தியது மற்றும் தீ பாதுகாப்பு நடவடிக்கைகளில் உள்ள குறைபாடுகள் ஆகியவை தொடா்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.