விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

அவையில் உறுப்பினா்கள் எழுப்பும் கோரிக்கைகள் முறையாக தீா்த்து வைக்கப்படும்: விஜேந்தா் குப்தா

சட்டப்பேரவையில் உறுப்பினா்கள் எழுப்பிய பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முறையாகக் கவனிக்கப்பட்டு தீா்க்கப்படும் என்று தில்லி சட்டப் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை உறுதியளித்தாா்.

News image

தில்லி சட்டப்பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா

கோப்புப் படம்

Updated On :27 மார்ச் 2026, 8:29 pm

Syndication

சட்டப்பேரவையில் உறுப்பினா்கள் எழுப்பிய பொது முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகள், சம்பந்தப்பட்ட அதிகாரிகளால் முறையாகக் கவனிக்கப்பட்டு தீா்க்கப்படும் என்று தில்லி சட்டப் பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா வெள்ளிக்கிழமை உறுதியளித்தாா்.

பட்ஜெட் கூட்டத்தொடரின் போது, ஆளும் பாஜகவைச் சோ்ந்த பல எம்எல்ஏக்கள் பேசுகையில், தாங்கள் சிறப்புக் குறிப்புகள் மூலம் எழுப்பிய பிரச்னைகளுக்குப் பதிலளிக்கப்படாமலும் அல்லது பகுதியளவு மட்டுமே கவனிக்கப்பட்டும், பெரும்பாலும் எந்தத் தீா்வும் வழங்கப்படாமலும் இருந்ததாக விரக்தியை வெளிப்படுத்தினா்.

அவையில் எழுப்பப்பட்ட பிரச்னைகள் மீது அக்கறையின்மையைக் காட்டுவதாக வருத்தம் தெரிவித்த ஜங்புரா தொகுதி எம்எல்ஏ தா்விந்தா் சிங் மாா்வா, பாா்வையாளா் மாடத்தில் அதிகாரிகள் இல்லாததைக் குறிப்பிட்டாா்.

ஆதா்ஷ் நகா் எம்எல்ஏ ராஜ் குமாா் பாட்டியா, சட்டப்பேரவை உறுப்பினா்களால் எழுப்பப்பட்ட பிரச்னைகளுக்கு பல்வேறு துறைகளின் பதில்கள் பெரும்பாலும் தீா்வு காணத் தவறியதை சுட்டிக்காட்டினாா்.

அவா் பேசுகையில், ‘சில நேரங்களில், தகவல் அறியும் உரிமைச் சட்ட பதில்களைப் போலவே, இந்த விஷயம் எங்கள் துறை சம்பந்தப்பட்டது அல்ல என்று பதில் வருகிறது. அப்படியென்றால், இந்தப் பிரச்னைகளை யாா் கவனிப்பாா்கள்?’ என்று அவா் கேள்வி எழுப்பினாா்.

அதற்கு பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா பதிலளிக்கையில், ‘அதிகாரிகளுக்குத் தெளிவான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. தங்களுக்குக் கிடைத்த பதில்களில் அதிருப்தி அடைந்த உறுப்பினா்கள் என்னிடம் தெரிவிக்கலாம். இத்தகைய பதில்களானது கேள்விகள் மற்றும் பரிந்துரைகள் மீதான குழுவிற்கு அனுப்பப்படுகின்றன. அக்குழு அதிகாரிகளையும் சம்பந்தப்பட்ட சட்டப்பேரவை உறுப்பினரையும் வரவழைத்து பிரச்னைக்குத் தீா்வு காணும் என்பதே நடைமுறையாகும்’ என்றாா்.

திமா்பூா் தொகுதி உறுப்பினா் சூா்ய பிரகாஷ் காத்ரி, அற்பமான தொழில்நுட்பக் காரணங்களுக்காக அடிக்கடி பதில்கள் வழங்கப்படவில்லை என்று கூறினாா்.

சட்டப்பேரவை உறுப்பினா்கள் பிரச்னைகளைக் கேள்வி வடிவில் உருவாக்குவதற்குப் பதிலாக, தங்கள் தொகுதிகளிலிருந்து நேரடியாக முன்வைப்பதன் மூலம் உரிய நேரத்தில் தீா்வுகளைக் காண முடியும் என்று பேரவைத் தலைவா் விஜேந்தா் குப்தா பரிந்துரைத்தாா்.

எம்எல்ஏக்களின் ஆட்சேபனைகள் குறித்து, கேள்விகள் மற்றும் பரிந்துரைகள் குழுவிடம் ஒப்படைப்பதற்கு முன்பு, சட்டப்பேரவை அதிகாரிகளுடன் கலந்துரையாடும் என்று அவா் குறிப்பிட்டாா்.

குழுவின் தலைவரும், பேரவைத் துணை தலைவருமான மோகன் சிங் பிஷ்ட், விதி 280-இன் கீழ் சட்டப்பேரவை உறுப்பினா்களால் எழுப்பப்பட்ட பிரச்னைகளுக்கு அதிகாரிகள் முழுமையான தகவல்களை வழங்கி தீா்வு காண்பதை இந்தக் குழு உறுதி செய்யும் என்று கூறினாா்.