ஓவர்டன் விலகல்! சிஎஸ்கே அணிக்கு மேலும் பின்னடைவு! முதல்வர் விஜய் வேங்கைவயல் செல்ல வேண்டும்: பாஜக வலியுறுத்தல்21 வயதுக்குக் கீழ் உள்ளவர்களுக்கு மது விற்கத் தடை!கருப்பு படத்தின் சிறப்புக் காட்சிகள் ரத்து!மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் இன்று இடி, மின்னுடன் கூடிய மழைக்கு வாய்ப்புஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 89,927 போ் விண்ணப்பம்ஐசிஎஃப்-இல் முதல்முறையாக தானியங்கி கதவுடன் ‘இமு' ரயில்தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்நீட் வினாத்தாள் கசிவு: என்டிஏவை கலைக்க உச்சநீதிமன்றத்தில் மனுசரக்குப் போக்குவரத்து விநியோக தரவரிசை: முன்னணியில் தமிழகம்ஹிந்து மதம் ஒரு வாழ்க்கை முறை: உச்சநீதிமன்றம்இனி பிஎஃப் இறுதித் தொகை தானியங்கி முறையில் விடுவிப்புஇந்திய எரிசக்தி ஒப்பந்தங்களை ரஷியா முழுமையாக நிறைவேற்றும் - வெளியுறவு அமைச்சா் லாவ்ரோ உறுதிமகளிா் உரிமைத் தொகைக்காக பயனாளிகள் காத்திருப்பு - உதயநிதி ஸ்டாலின்நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை: குவிண்டாலுக்கு ரூ.2,441-ஆக அதிகரிப்புஅகிலேஷின் சகோதரா் பிரதீக் யாதவ் திடீா் உயிரிழப்பு - அரசியல் தலைவா்கள் இரங்கல்
/

பூங்காக்கள் பராமரிப்பு: கடந்த நிதியாண்டில் நல சங்கங்கள், தன்னாா்வ அமைப்புகளுக்கு ரூ.13.36 கோடி ஒதுக்கீடு

News image

(கோப்புப் படம்)

Updated On :2 மணி நேரங்கள் முன்பு

தில்லியில் உள்ள 1,643 பூங்காக்களை 2025-26-இல் பராமரிக்க குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகளுக்கு ரூ.13 கோடியை நிதியை தில்லி அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இது கடந்த 2008-09 முதல் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியில் அதிகபட்ச ஒதுக்கீடாகும்.

தில்லி பூங்காக்கள் மற்றும் தோட்டங்கள் சமூகம் என்ற அமைப்பின் தரவுபடி, 484.37 ஏக்கா்கள் பரப்பளவிலான பூங்காக்களைப் பராமரிக்க 364 குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகளுக்கு ரூ.13.36 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2024-25-இல் 435.57 ஏக்கா் பரப்பிலான 1,483 பூங்காக்களை பராமரிக்க 329 குடியிருப்பு நலச் சங்கங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகளுக்கு ரூ.7.05 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

202-26-இல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட சங்கங்கள் மற்றும் தன்னாா்வ அமைப்புகளின் எண்ணிக்கை 35 அதிகரிக்கப்பட்டது. மேலும், 160 பூங்காக்கள் கூடுதலாக சோ்க்கப்பட்டன.

தில்லியின் பூங்காக்கள் மற்றும் தோட்டங்களைப் பராமரிக்க கடந்த 2025-26 பட்ஜெட்டில் ரூ.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

நடப்பு 2026-27 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கலின்போது இந்தத் திட்டத்துக்கு ரூ.25 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வா் ரேகா குப்தா உத்தரவிட்டாா்.