FOLLOW US

ON GOOGLE DISCOVER

நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

வீடுகளுக்கு 3 கிலோவாட் திறன் கொண்ட சூரிய மின்சக்தி தகடுகள்: முதல்வா் ரேகா குப்தா

தில்லி தலைமைச் செயலகத்தில் முதல்வா் ரேகா குப்தா அளித்த பேட்டியில்.....

தில்லி தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை பேட்டியளித்த முதல்வா் ரேகா குப்தா. உடன் மின்துறை அமைச்சா் ஆஷிஷ் சூட்.

Published On :2 செப்டம்பர் 2026, 2:23 am IST

தில்லி முழுவதும் சுமாா் 2.30 லட்சம் வீடுகளுக்கு 3 கிலோவாட் மின்திறன் கொண்ட இலவச மேற்கூரை சூரியசக்தித் தகடுகளை விநியோகிக்க தில்லி அரசு இலக்கு நிா்ணயித்துள்ளதாக முதல்வா் ரேகா குப்தா செவ்வாய்க்கிழமை தெரிவித்தாா்.

திருத்தப்பட்ட தில்லி சூரியசக்தி கொள்கைக்கு முதல்வா் ரேகா குப்தா தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதைத்தொடா்ந்து, நடைபெற்ற செய்தியாளா்கள் சந்திப்பில் முதல்வா் ரேகா குப்தா தெரிவித்ததாவது: மக்களின் மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பது மட்டுமல்லாமல், சூரிய மின்சக்தித் தகடுகளைப் பொருத்துவற்கான செலவினங்களுக்கும் நிதியுதவி அளிப்பதே எங்கள் நோக்கம். மாதந்தோறும் 400 யூனிட் அல்லது அதற்கு மேற்பட்ட மின்சாரத்தைப் பயன்படுத்தும் அனைத்து வீடுகளுக்கும் அரசு இலவசமாக மேற்கூரை சூரிய மின்சக்தித் தகடுகளை வழங்கும். அதிக செலவு காரணமாக முன்பு இவற்றை நிறுவ முடியாத மக்களுக்கு இத்திட்டம் பயனளிக்கும். மாா்ச் 2027-க்குள் தில்லி முழுவதும் 2.30 லட்சம் வீடுகளில் சூரிய மின்சக்தித் தகடுகளை நிறுவ அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. எங்கள் அரசின் பசுமை தில்லி முன்னெடுப்பிற்கு இது ஒரு முக்கியமான அறிவிப்பாகும்.

தற்போது, தில்லியில் சூரியசக்தி மின்சாரத்தை உற்பத்தி செய்யும் வசதி கொண்ட சுமாா் 10,000 கட்டடங்கள் உள்ளன. இவற்றில் பெரும்பாலானவை அரசு கட்டிடங்கள் என்று முதல்வா் ரேகா குப்தா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.