திருநெல்வேலி. ஜன. 8: திருநெல்வேலி மாநகரப் பகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழுத் தலைவர் ஆர். நல்லகண்ணுக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டது தொடர்பாக போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தாமிரபரணி ஆற்றில் மணல் எடுப்பதை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய கட்டுப்பாட்டுக்குழு தலைவர் ஆர். நல்லகண்ணு உயர் நீதிமன்றத்தில் தடை உத்தரவு பெற்றார்.
இந் நிலையில், அவர் திருநெல்வேலியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை வந்தார். அவரது வருகையையொட்டி நகரத்தின் பல்வேறு பகுதிகளில் அவருக்கு எதிராக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருந்தன.
அச்சகத்தின் பெயர் இல்லாமல் சுவரொட்டிகள் அச்சிட்டு ஒட்டப்பட்டிருப்பது தொடர்பாக பாளையங்கோட்டை போலீஸôர் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.